அருணாச்சல பெண்ணிடம் அத்துமீறிய சீன அதிகாரிகள் - இந்தியா கடும் எச்சரிக்கை!
Sep 10, 2026, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அருணாச்சல பெண்ணிடம் அத்துமீறிய சீன அதிகாரிகள் – இந்தியா கடும் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 09:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்றும், சீனத் தரப்பு எவ்வளவு மறுத்தாலும் இந்த மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றப் போவதில்லை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நீண்டகாலமாகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னைகள் உள்ளன. ஏற்கனவே லடாக் பகுதியில் எல்லையோரமாகச் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அருணாச்சலப் பிரதேசத்தைச் சீனாவின் “தெற்கு திபெத்” என்று கூறிவருகிறது. இந்த நிலையில், இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை, ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் 18 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்துச் சீன அதிகாரிகள் துன்புறுத்தியுள்ளனர்.

கடந்த நவம்பர் 21 ஆம் தேதி, லண்டனில் இருந்து ஜப்பானுக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் சீனாவில் ட்ரான்சிட் எனப்படும் காத்திருக்கும் நேரத்தில் இந்தியா பாஸ்போர்ட் செல்லாது என்று கூறி துன்புறுத்தியதாகப் பெமா வாங் தாங்​ குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பு சோதனையின் ‘இந்தியா, இந்தியா என்று கத்திய பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை தனியாக அழைத்துச் சென்றதாகவும் அருணாச்சலப் பிரதேசத்தின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஷாங்காய் வழியாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பயணம் செய்ததாகவும், இம்முறை கிளம்பும் முன் இந்திய குடிமக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று லண்டனில் உள்ள சீன தூதரகம் உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையின் போது, சீன குடியேற்ற அதிகாரிகளும் China Eastern Airlines ஊழியர்களும் தன்னை கேலி செய்ததாகவும், “சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தெளிவான தகவல், சரியான உணவு அல்லது விமான நிலைய வசதிகளைப் பயன்படுத்தும் உரிமைகளும் தனக்கு மறுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள நண்பர் ஒருவர் மூலம் ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்ட தம்மை இந்திய தூதரக அதிகாரிகள், சீனாவில் இருந்து ஜப்பானுக்கு பத்திரமாக வழியனுப்பி வைத்ததாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆன்லைனில் தம்மை ட்ரோல் செய்வதைக் கண்டித்துள்ள பெமா வாங் தாங், மத்திய அரசால் எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் தனது தனிப்பட்ட நலனுக்காக அல்ல என்றும், அனைத்து இந்தியர்களின் கண்ணியத்துக்காகவே என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் எக்ஸ் தளத்தில் இல்லை என்றாலும், தனக்கு ஆதரவாகப் பேசிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள்ளார். இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியரை விமான நிலையத்தில் தடுத்து வைத்த விவகாரம்குறித்து சீன அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச விமானப் பயணத்தை நிர்வகிக்கும் பல மரபுகளை மீறும் வகையில் நடந்து கொண்ட சீன அதிகாரிகளால் தங்கள் செயல்களை இன்னும் விளக்க முடியவில்லை என்று கூறியுள்ள ஜெய்ஸ்வால், சீன அதிகாரிகளின் நடவடிக்கைகள் அனைத்து நாடுகளின் குடிமக்களுக்கும் 24 மணிநேரம் வரை விசா இல்லாத போக்குவரத்தை அனுமதிக்கும் சீனாவின் சொந்த விதிமுறைகளையும் மீறியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: அருணாச்சல பெண்சீன அதிகாரிகள்Indiaஇந்தியாChinese officials violated Arunachal woman - India issues strong warningஇந்தியா கடும் எச்சரிக்கை
Share
Tweet
SendShare
Previous Post

26/11 பயங்கரவாத தாக்குதல் இனி நடக்கவே நடக்காது : தேசமே உறுதி ஏற்பு!

Next Post

கருப்பு நிற கேரட் : களைகட்டும் சாகுபடி : ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies