தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் நாளை மறுநாள் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
















