வாழ்வாதாரத்திற்கு போராட்டம் : மயான பணி செய்யும் பட்டதாரி இளைஞர்!
Jul 29, 2026, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாழ்வாதாரத்திற்கு போராட்டம் : மயான பணி செய்யும் பட்டதாரி இளைஞர்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லினக்கத்துடன் மயானங்களில் பணியாற்றி வரும் பட்டதாரி இளைஞர், தனது வாழ்க்கை தரத்தை உயர்த்த மயான பணியை அரசு நிரந்தர பணியாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். பி.ஏ பட்டதாரியான இவர், சிவகங்கையில் உள்ள மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். சசிகுமாரின் தந்தை மயான பணிகளை மேற்கொண்டு வந்ததால், சுற்றுவட்டார பகுதிகளில் அவருக்கு வேலை வழங்க யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனது வருங்காலமும், குடும்பத்தின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாவதை உணர்ந்த சசிகுமார், தனது தந்தை செய்து வந்த மயான பணிகளையே கையிலெடுத்து மேற்கொள்ள முடிவு செய்தார்.

ஆனால் நாளடைவில் அந்த மயான பணிகள் மூலம் கிடைத்த வருமானம் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த சசிகுமார், தானொரு இந்துவாக இருப்பினும் மத நல்லிணக்கத்துடன் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமுதாய மக்களின் மயானங்களிலும் பணியாற்றத் தொடங்கினார்.

இயற்கை எய்தியவர்களுக்கு மயானத்தில் குழி தோண்டுவது, உடல்களை எரியூட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறும் சசிகுமார், அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்தே தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். சாதி, மத பேதமின்றி சசிகுமார் மேற்கொண்டு வரும் இந்த மயான பணியை, அவரது குடும்பத்தினர் புனிதமான பணியாகவே கருதுகின்றனர்.

இருப்பினும் போதுமான வருமானம் இல்லாத காரணத்தால் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பதாக கூறும் அவர்கள், மயான பணியில் ஈடுபடுவதால் சமுதாயத்தில் தங்களுக்கென்று எந்தவொரு மதிப்பும் இல்லாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில், தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், சமுதாயத்தில் மயான பணிக்கான மதிப்பை அதிகரிக்கவும், இந்தப் பணியை அரசு நிரந்தர பணியாக மாற்ற வேண்டும் எனச் சசிகுமார் மற்றும் குடும்பத்தார் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு இவர்களின் கோரிக்கையைக் கருத்தில்கொண்டு, சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: special storyStruggle for livelihood: A young graduate working as a cemetery workernews
ShareTweetSendShare
Previous Post

90-ஸ் கிட்ஸ்களின் நாயகன் ஜான் சீனா ஓய்வு – உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏமாற்றம்!

Next Post

விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies