வாழ்வாதாரத்திற்கு போராட்டம் : மயான பணி செய்யும் பட்டதாரி இளைஞர்!
Sep 12, 2026, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாழ்வாதாரத்திற்கு போராட்டம் : மயான பணி செய்யும் பட்டதாரி இளைஞர்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 07:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகங்கையில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லினக்கத்துடன் மயானங்களில் பணியாற்றி வரும் பட்டதாரி இளைஞர், தனது வாழ்க்கை தரத்தை உயர்த்த மயான பணியை அரசு நிரந்தர பணியாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். பி.ஏ பட்டதாரியான இவர், சிவகங்கையில் உள்ள மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். சசிகுமாரின் தந்தை மயான பணிகளை மேற்கொண்டு வந்ததால், சுற்றுவட்டார பகுதிகளில் அவருக்கு வேலை வழங்க யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனது வருங்காலமும், குடும்பத்தின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாவதை உணர்ந்த சசிகுமார், தனது தந்தை செய்து வந்த மயான பணிகளையே கையிலெடுத்து மேற்கொள்ள முடிவு செய்தார்.

ஆனால் நாளடைவில் அந்த மயான பணிகள் மூலம் கிடைத்த வருமானம் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த சசிகுமார், தானொரு இந்துவாக இருப்பினும் மத நல்லிணக்கத்துடன் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமுதாய மக்களின் மயானங்களிலும் பணியாற்றத் தொடங்கினார்.

இயற்கை எய்தியவர்களுக்கு மயானத்தில் குழி தோண்டுவது, உடல்களை எரியூட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறும் சசிகுமார், அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்தே தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். சாதி, மத பேதமின்றி சசிகுமார் மேற்கொண்டு வரும் இந்த மயான பணியை, அவரது குடும்பத்தினர் புனிதமான பணியாகவே கருதுகின்றனர்.

இருப்பினும் போதுமான வருமானம் இல்லாத காரணத்தால் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பதாக கூறும் அவர்கள், மயான பணியில் ஈடுபடுவதால் சமுதாயத்தில் தங்களுக்கென்று எந்தவொரு மதிப்பும் இல்லாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில், தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், சமுதாயத்தில் மயான பணிக்கான மதிப்பை அதிகரிக்கவும், இந்தப் பணியை அரசு நிரந்தர பணியாக மாற்ற வேண்டும் எனச் சசிகுமார் மற்றும் குடும்பத்தார் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு இவர்களின் கோரிக்கையைக் கருத்தில்கொண்டு, சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: newsspecial storyStruggle for livelihood: A young graduate working as a cemetery worker
Share
Tweet
SendShare
Previous Post

90-ஸ் கிட்ஸ்களின் நாயகன் ஜான் சீனா ஓய்வு – உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏமாற்றம்!

Next Post

விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies