எங்கள் கோரிக்கை எப்போது நிறைவேறும்? - ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் குமுறல்!
Jan 13, 2026, 11:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எங்கள் கோரிக்கை எப்போது நிறைவேறும்? – ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் குமுறல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 9, 2026, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் திருநாளுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்ட உள்ளன. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து தயார்படுத்தி வரும் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர். அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்……

பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், காளைகளை தயார்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நாலுகோட்டை பகுதியில் ஏராளமான இளைஞர்கள் காளைகள் வளர்த்து வருவதுடன் அவற்றுக்கு தினமும் வித்தியாசமான பயிற்சிகளும் அளித்து வருகின்றனர்.

புகழ், சிலம்பு, சிங்கம், அப்புக்குட்டி, சச்சின், காளிமுனி, அழகர், புருசுலி, சின்னத்தம்பி, அன்பு, கருப்பன் இவையெல்லாம் ஏதோ குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் அல்ல. இவை அனைத்தும் இளைஞர்களால் வளர்க்கப்படும் காளைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள்.

அதிகாலையிலேயே காளைகளுக்கான பயிற்சிகள் தொடங்கி விடுகின்றன. காளைகள் நீண்ட நேரம் நின்று விளையாடும் வகையில் நேராக நிற்கும் விதமாக சுமார் 30 நிமிடங்களுக்கு தலையை தூக்கி கட்டி வைக்கின்றனர். அந்த பயிற்சி முடிந்தவுடன் உடல் வலிமைக்காக பச்சை முட்டையை காளைகளுக்கு கொடுக்கின்றனர். கால்கள் வலுப்பெற 40 நிமிடங்கள் சாலைகளில் காளைகளுக்கு ஓட்டப் பயிற்சி.

அது முடிந்ததும் கண்மாயில் இறக்கி 20 நிமிடங்களுக்கு நீச்சல் பயிற்சி… இதனை அடுத்து நீண்ட நேரம் தாக்குப் பிடித்து விளையாட தலைசுருளி வேர் காய்ச்சி காளைகளுக்கு சாறு கொடுக்கின்றனர். ஒருநாள் இடைவெளி விட்டு உழவு பணி மேற்கொண்டு காளைகளின் கால்களை மேலும் வலிமையாக்குகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர் சுமார் 30 நாட்களுக்கு பருத்திவிதை, துவரம் தூசி, பேரிச்சம்பழம் என சத்தான உணவுகளை காளைகளுக்கு வழங்குகின்றனர்.

இளைஞர்களும் காளைகளுடன் சேர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். பட்டதாரி இளைஞர்களும் காளைகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டிவரும் சூழலில் தங்களுக்கு சமூகம் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர்.

காளைகளை வளர்க்க மாதம்தோறும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்று தெரிவிக்கும் உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளுக்கு டாடா ஏஸ் வாகனங்களில் காளைகளை அழைத்து செல்லும் போது காவல்துறையினர் மறித்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆன்லைன் முறையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு டோக்கன் வழங்குவதால் முந்துபவர்களை தவிர மற்றவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படுவதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதனையும் மாற்றி நேரடியாக டோக்கன் வழங்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் காளைகளின் உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்துபவர்கள் ஒரு குறிப்பிட்ட காளைகளை மட்டுமே அழைப்பதை தவிர்த்து அனைத்து காளைகளையும் களம் இறக்க அனுமதி அளிக்க முன் வர வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

பொங்கல் திருநாளையொட்டி அனைவரும் எதிர்பார்க்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் காளைகள் சீறிப் பாய தயாராகி வருகின்றன. அதேசமயம் காளைகளை வளர்த்து பயிற்சியளிக்கும் தமது கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே உரிமையாளர்களின் குரலாக ஒலிக்கிறது.

Tags: jallikattu news 2026palamedu jallikattu 2026jallikattu videos 2026alanganallur jallikattu 2026avaniyapuram jallikattu 2026kotha sanambatla jallikattu 2026jallikattu topjallikattu datejallikattu livejallikattu newsjallikattu 2026tamil jallikattu2026 jallikattutoday jallikattu
ShareTweetSendShare
Previous Post

சபரிமலைக்கு பெரிய வழிப்பாதை வழியாக சென்றவர்கள் தடுத்து நிறுத்தம் – ஐயப்ப பக்தர்கள் போராட்டம்!

Next Post

கொடைக்கானலில் ரோப் கார் சேவை – தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies