ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து - வளைகுடாவில் திரும்புமா அமைதி? - சிறப்பு தொகுப்பு!
Jun 18, 2026, 11:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான்-அமெரிக்கா இடையே ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர நடவடிக்கையாக 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு இடையிலான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்” என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்ட இந்த ஆவணத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி 110 நாட்களுக்குப் பிறகு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகும் என்று அறிவிக்கப்பட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே பிரான்ஸில் நடந்த ஜி 7 உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் கொடுத்த இரவு விருந்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எலக்ட்ரானிக் முறையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நேரத்தில் ஈரான் அதிபர் பெஷாக்கிடும் கையெழுத்திட்டார்.

நீடித்த அமைதிக்கு வழிவகுப்பதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும், மக்களுக்காக சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையான இந்த ஒப்பந்தம் விரைவில் எரிசக்தி விலை குறைக்க உதவும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

கையெழுத்தான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செயல்பாட்டைச் சோதித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம், தடைகளை படிப்படியாகத் தளர்த்துவதற்கான ஒரு செயல்திட்டத்தையும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிப்பதையும், ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியை அனுமதிக்கும் கருவூல விலக்குகளையும் கொண்டுள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வந்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அடுத்த 60 நாட்களுக்குள் ஒரு விரிவான தீர்வை எட்டுவதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

வர்த்தகக் கப்பல்கள் எவ்விதக் கட்டணமுமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதற்கு ஹார்முஸ் ஜலசந்தியைத் உடனடியாகத் திறக்கவும், அணு ஆயுதம் தயாரிப்பதற்கேற்ற தரத்தில் ஈரான் சேமித்து வைத்துள்ள யுரேனியத்தை அழிப்பதற்கு ஈரானை ஒப்புக்கொள்ள வைக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களை உருவாக்கவோ கையகப்படுத்தவோ மாட்டோம் என்ற தனது உறுதிப்பாட்டை ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகவும் அதன் படி சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) மேற்பார்வையின் கீழ் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்புகள் மேலாண்மை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தான 30 நாட்களுக்குள் ஈரான் எல்லைப் பகுதிகளிலிருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்பப் பெறுவதற்கும், ஈரான் மீதான பொருளாதார தடைகள் உட்பட அந்நாட்டு எண்ணெய் ஏற்றுமதிக்கான தடைகளைப் படிப்படியாகத் தளர்த்துவதற்கும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.

குறிப்பாக, 300 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறையாத மதிப்புள்ள பொருளாதார மேம்பாட்டுத் நிதி வழங்கும் திட்டமும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.

DEATH TO AMERICA என்று ஓயாமல் முழங்கி வந்த ஈரான், அதே அமெரிக்காவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது நீண்ட கால தீர்வுக்கான தீர்க்கமான ராஜ தந்திர முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Tags: TRUMP SIGNED DEALiran warStrait of HormuzIran-US wariran war newsus iran war liveiran war updateiran war latestisrael us iran waramerica vs iran war
ShareTweetSendShare
Previous Post

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது; நாளை தனி தீர்மானம்

Related News

மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது; நாளை தனி தீர்மானம்

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI : விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை – சிறப்பு கட்டுரை!

மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை – ஆளுநர் உரை

தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் – சென்னையில் பாஜக ஆர்பாட்டம்!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் சமூகநீதி சர்வே – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

வெள்ளை அறிக்கையில் திமுக ஆட்சி கால நிதி முறைகேடு இடம்பெறாத விவகாரம் – முதல்வைர் அதிருப்தி என தகவல்!

சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து சென்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் – பதாகைகளை ஏந்தியபடி கோஷம்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் – சட்டப்பேரவையில் ஆளுநர் உரை!

சமாஜ்வாதி கட்சியிலும் பிளவு ஏற்படும் – அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர்

தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.14,000 கோடி அளித்துள்ளது – ரவிசங்கர் பிரசாத்

தவெகவில் இணைந்தால் முழு மனதுடன் வரவேற்போம் – சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தீர்மானம்!

முதல்வர் விஜய்க்கு எதிராக 3 தேர்தல் வழக்குகள் – உயர் நீதிமன்றத்தில் தாக்கல்!

தவெகவுடன் மதிமுக கூட்டணி? – முதலமைச்சரை சந்தித்த பின் வைகோ விளக்கம்!

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies