ஈரானில் உருவாகும் புதிய அதிகார மையம் : களமிறங்கும் கமேனி பேரன் - சிறப்பு தொகுப்பு!
Aug 30, 2026, 11:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஈரானில் உருவாகும் புதிய அதிகார மையம் : களமிறங்கும் கமேனி பேரன் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 16, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரானின் உச்சத் தலைவராக பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றாத நிலையில், முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் பேரன் அலி கமேனியை அடுத்த உச்ச தலைவராக முன்மொழிய அந்நாட்டு மதகுருமார்கள் தயாராகி வருகின்றனர். ஈரானின் அதிகார மையத்தில் என்ன நடக்கிறது? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…

அணு ஆயுத திட்டங்களை ஈரான் கைவிட அறிவுறுத்தி, அந்நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதலைத் தொடர்ந்தன. இந்தத் தாக்குதலில் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா கமேனி, அந்நாட்டின் புதிய உச்சத் தலைவராக பொறுப்பேற்றார்.

ஆனால் பதவியேற்ற பிறகு, அவர் ஒருமுறைகூட பொதுமக்கள் முன்பு தோன்றவில்லை. தந்தையின் இறுதிச் சடங்கில் மற்ற 3 மகன்களும் பங்கேற்ற நிலையில், மொஜ்தபா கமேனி பங்கேற்காதது, ஈரான் மக்களிடையே மட்டுமல்ல, உலக நாடுகளிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மொஜ்தபா கமேனியின் முகம் சிதைந்து, உருவமே மாறியதாக கூறப்படும் நிலையில், அதனால்தான் அவர் பொதுவெளியில் வர தயங்குவதாக ஒருசாரார் கூறுகின்றனர். ஆனால், பாதுகாப்பு பிரச்னை காரணமாக அவர் ரகசிய இடத்தை விட்டு வெளிவர மறுப்பதாக மற்றொரு பிரிவினர் கூறுகின்றனர்.

இருப்பினும், மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாததற்கு
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமா? உடல்நலப் பிரச்சினையா? அல்லது திரைமறைவில் இருந்து காய்களை நகரத்துகிறாரா? என்ற விவாதம் சர்வதேச அளவில் நடைபெற்று கொண்டுதான் வருகின்றன.

இந்தச் சூழலில், ஈரானின் புரட்சிகர காவல் படையை நிறுவியவருமான அயதுல்லா அலி கமேனியின் பேரன் அலி கமேனி மீது மதகுருமார்களின் கவனம் திரும்பியிருக்கிறது.

மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாததால், மத அடையாளத்திலும், புரட்சிகர தலைவரின் வாரிசு என்ற அரசியல் அடையாளத்திலும் அலி கமேனியை அடுத்த உச்ச தலைவராக முன்னிறுத்த மதகுருமார்கள் தீவிர முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இது அதிகார மாற்றமா? அல்லது தற்போதைய ஆட்சிக்கு கூடுதல் ஆதரவை உருவாக்கும் அரசியல் நகர்வா? என்பது இன்னும் தெளிவாக தெரியவரவில்லை.

அமெரிக்கா உடன் ஈரான் மீண்டும் ஒரு போரில் ஈடுபட்டுள்ள இந்தத் தருணத்தில், அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பிக்கக் கூடிய தலைமை மதகுரு கிட்டத்தட்ட செயல்படாத நிலையில் தான் இருக்கிறார். இதனால், அந்தப் பொறுப்பில் அயதுல்லா அலி கமேனியின் பேரன் அலி கமேனியை உடனடியாக நியமித்து, வெற்றிடத்தை நிரப்ப மதகுருமார்கள் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு பின்புலத்தில் மிகப்பெரிய காரணமும் இருக்கிறது. ஈரானில் அதிபரை விட உச்சத் தலைவருக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது. ராணுவம், நீதித்துறை, வெளியுறவுக் கொள்கை, அணு ஆயுதத் திட்டம் என முக்கிய முடிவுகள் அனைத்திலும் உச்சத் தலைவரின் பங்கு அளப்பரியது.

அதனால்தான், உச்சத் தலைவர் பொதுவெளியில் தோன்றாத நிலையில், அவருக்கு பதிலாக ஈரானில் புதிய அதிகார மையம் உருவாகிறதா? என்ற கேள்வி சர்வேச அளவில் எழுந்திருக்கிறது.

ஒருபுறம் ஈரானில் அமெரிக்கா நிகழ்த்திய போரின் காயங்கள் இன்னமும் ஆறாத ரணமாக தொடர்கிறது. மறுபுறம், ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், அந்நாட்டின் அதிகார மையத்தில் நிகழும் ஒவ்வொரு மாற்றமும் ஈரானின் எதிர்காலத்தை மட்டுமல்ல, மத்திய கிழக்கின் அரசியல் போக்கையும் தீர்மானிக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது…

Tags: us iran war liveiran war updateiran war latestisrael us iran waramerica vs iran warAli Khamenei grandsoniran warStrait of HormuzIran-US warMojtaba Khameneiiran war news
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் செயற்கை நிறமிகள் கலந்த கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை!

Next Post

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

Related News

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies