திமுக ஆட்சிக் காலத்தில் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த 2021 முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் வரை நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என அறிவித்தார்.
விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைக்களுக்கு தவெக அரசு உறுதுணையாக நிற்கும் எனக்கூறிய முதலமைச்சர்,
திருவண்ணாமலை சிப்காட் மற்றும் பரந்தூர் விமான நிலைய திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளையும் அரசு திரும்பப்பெற்று கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், வழக்குகள் திரும்பப்பெறப்படுவதால் ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டார்.
















