சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் ஆயிரத்து 562 விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம், நீலாங்கரை, திருவொற்றியூர், காசிமேடு துறைமுகம் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். பட்டினப்பாக்கம் பகுதியில் ஆயிரத்து 220 சிலைகள் கரைக்கப்படுகின்றன.
ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை முதலே இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் விநாயகர் சிலைகளுடன் வந்து சிலைகளை விசர்ஜனம் செய்து வருகின்றனர்.
















