சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 ஆகஸ்ட் மாதம் விண்ணில் பாய்கிறது என இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 விண்கலம், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக விண்ணில் நேற்று ஏவப்பட்டது.
இந்நிலையில் இஸ்ரோவில் உள்ள திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநர் டாக்டர் வி நாராயணன் பேசும்போது,
சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரனை அடையும் என்றும், முதல் முறையாக ஒரு மென்மையான தரையிறக்கம் செய்யப் போகிறோம், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய திட்டமாக உள்ளது. இந்த தரையிறக்கம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நாங்கள் நம்புகிறோம். இதன்பிறகு உடனடியாக ககன்யா திட்டத்திற்கும், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 இந்தியா சார்பாக முதன் முதலில் விண்ணில் ஏவப்பட உள்ளது என தெரிவித்தார்.
ஆதித்யா L1
ஆதித்யா L1 சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி பயணமாக உள்ளது. பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரிய-பூமி அமைப்பின் லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1) ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் விண்கலம் வைக்கப்படும். இது சூரிய செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலையில் அதன் தாக்கத்தை உண்மையான நேரத்தில் கவனிப்பதில் அதிக நன்மையை வழங்கும். ஃபோட்டோஸ்பியரைக் கவனிக்க ஏழு பேலோடுகளை விண்கலம் சுமந்து செல்கிறது.