நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலம், புவியின் 5வது சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் உயர்த்தும் முயற்சி வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவ பகுதியை ஆராய கடந்த 14-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பின்னர் ஜூலை 17-ம் தேதியன்று 2-வது புவியின் சுற்றுப்பாதைக்கு சந்திரயான் -3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்தது.
இந்நிலையில், சந்திரயான் -3 விண்கலத்தை 3-வது புவியின் சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியை வெற்றிகரமாக மேற்கொண்டனர். சந்திரயான் 3 விண்கலத்தின்- 4வது புவியின் சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
Chandrayaan-3 Mission:
The orbit-raising maneuver (Earth-bound perigee firing) is performed successfully from ISTRAC/ISRO, Bengaluru.
The spacecraft is expected to attain an orbit of 127609 km x 236 km. The achieved orbit will be confirmed after the observations.
The next… pic.twitter.com/LYb4XBMaU3
— ISRO (@isro) July 25, 2023
தற்போது சந்திரயான் 3 விண்கலத்தின்- 5வது புவியின் சுற்றுப்பாதையை உயர்த்தும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது என பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அடுத்து சந்திரயான் 3 விண்கலம் 127609 கிமீ x 236 கிமீ சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சுற்றுக்கு உயர்த்தும் பணி ஆகஸ்ட் 1, 2023 அன்று நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தெறிவித்துள்ளது.