ஊழல் செய்வதில் நம்பர் ஒன் திமுக தான் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
Sep 6, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் செய்வதில் நம்பர் ஒன் திமுக தான் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

மோடி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க முடிகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Murugesan M by Murugesan M
Aug 2, 2023, 04:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழலுக்கு எதிரான தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின், “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையின் ஆறாம் நாளான இன்று திருமயத்தில் மேற்கொண்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இருபுறமும் நின்ற மக்களிடம் அண்ணாமலை குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
பாஜகவைப்  பொறுத்தவரை இந்த யாத்திரை மக்களைச்  சந்திக்க ஒரு வாய்ப்பு.  நாம் சொல்லும் கருத்துக்களைச்  சாமானிய மக்களும் ஏற்றுகிறார்கள்.

இந்த 9 ஆண்டுகள் பிரதமர் மோடி மாற்றத்தைத்  தந்துள்ளார் என்றும் எண்ணுகிறார்கள். இந்த யாத்திரை மூலம்  நல்லதொரு மாற்றம் வரும் என்பது எங்களது நோக்கம். விமர்சனங்கள் வைக்க வைக்க நாம் செய்யக்கூடிய வேலை சரி என்று நமக்கு தோன்றும். யாத்திரை மக்களைச் சென்றடைகிறது, யாத்திரைக்கான நோக்கம் நிறைவேறுகிறது என்பதை எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களே  நமக்கு காட்டுகின்றன . எங்களைப் பொறுத்தவரை இருப்பதை இருப்பதாகவும், செய்ததைச் சொல்கின்றோம். நாங்கள்  பொய் சொல்வது கிடையாது.

பிரதமர் மோடி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது,  ஆட்சியில் திமுக செய்யும் குற்றங்களை ஆதாரத்துடன் தந்து வருகின்றோம். எதையும் பேச வேண்டும் என்பதற்காக பேசாமல், செய்த  வேலையை மக்களிடம் சொல்லி மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க ஆதரவு கேட்டுக் கொண்டு வருகின்றோம். இந்த யாத்திரையைப் பொறுத்த வரையில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தமிழ்நாட்டில் வெல்ல வேண்டும். இந்த யாத்திரை முடியும்போது தெரியும்.

பாஜக தனது வேலையைச் செய்கிறது அதிமுக அதிகாரப்பூர்வமாக தேசிய  ஜனநாயக கூட்டணியில்  உள்ளது, அதனால் கூட்டணி கட்சி கூட்டத்திற்கும் அழைப்புகள் விடுக்கப்பட்ட உள்ளது.  இதில் யாருக்கும் வருத்தம் கிடையாது. திமுகவின் ஊழல் முதல் பட்டியல் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வெளியிடப்பட்டது. இரண்டாவதாக வெளியிடப்பட்ட பட்டியல் நடவடிக்கைக்காக வெளியிடப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுக்கப்பட்ட புகார்கள் எதற்கும் நடவடிக்கை எடுக்காததால், தற்பொழுது இந்த பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது, ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்.

இந்தியாவிலேயே இதுவரை நடந்த ஆட்சியில் சிறந்த ஆட்சியாக பிரதமர் மோடியின் ஆட்சி உள்ளது. இந்த நல்லாட்சியை யாருடனும் ஒப்பிட முடியாது. எல்லா விதத்திலும் எல்லாருக்குமான பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியாக உள்ளது. இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள். அரசியலில் சித்தாந்தத்தின் அடிப்படையில் எதிர்ப்பது வேறு, பொய்யின் அடிப்படையில் எதிர்ப்பது தவறு. 2019-ல் அதைத்தான் இங்கு செய்தார்கள். ஆனால் இம்முறை மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

தமிழ்நாட்டில் இன்று ஊழலை எதிர்த்து பேசக்கூடிய கட்சி பாஜக தான். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் தவறை சுட்டிக்காட்டுவது பாஜக தான்.
நம்மைப் பொறுத்தவரை அமித்ஷா சொன்னதை போல இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஊழல் செய்யக்கூடிய அரசாங்கமாக இருப்பது திமுக தான் அதைத்தான் மக்கள் மன்றத்தில் வைக்கின்றோம் என தெரிவித்தார்.  நான் எந்த இடத்திலும் போட்டியிடவில்லை பாதயாத்திரை முடித்துவிட்டு கட்சிப் பணியை செய்யத்தான் நேரம் இருக்கிறது என் வேலை கட்சியை வளர்ப்பது கட்சி வேலை செய்வது என்று கூறினார்.

Tags: k Annamalai Bjp
Share
Tweet
SendShare
Previous Post

வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல் கர்நாடக அரசு திண்டாட்டம்!

Next Post

நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் – 11 மசோதாக்கள் நிறைவேற்றம்

Related News

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies