தரமில்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக கேன் குடிநீர் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி சில இடங்களில் தரம் குறைந்த மற்றும் பாதுகாப்பற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தடுக்கும் பொருட்டு, தமிழக சுகாதாரத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், கேன் குடிநீரில் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்புதுறை உரிம விவரங்களும் இடம்பெறுவது அவசியம் என தெரிவித்துள்ளது. மேலும், தரமற்ற குடிநீரை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
















