இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் பெருமிதம் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து பிரதமர் இது குறித்து காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றை நியூசிலாந்து ஏற்றுமதியாளர்களுக்கு திறந்து விடுவதாகத் தெரிவித்துள்ளார். இது ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு ஒப்பந்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 140 கோடி மக்களையும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க உள்ள ஒரு நாட்டையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அணுகும் வாய்ப்பை நியூசிலாந்து ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
















