சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த போதை இளைஞர்கள், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியதுடன், கேள்வி கேட்ட பெண்ணையும் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாவூர் எர்ணேஸ்வரன் தெருவில் போதையில் சுற்றித் திரிந்த இளைஞர்கள், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்து கேள்வி கேட்ட பெண்ணை குறிவைத்து போதை நபர்கள் தாக்கியுள்ளனர். இதில் பெண் காயமடைந்தார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சந்தோஷ் மற்றும் லோகேஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தாக்குதலில் ஈடுபட்ட மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
















