சிக்கிம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வீரர்களுடன் இணைந்து கால்பந்து போட்டியை விளையாடினார்.
சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்ட 50-ஆவது ஆண்டு கொண்டாட்ட விழா இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சிக்கிம் தலைநகர் காங்டாக்கிற்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் காங்டாக்கில் உள்ள மைதானத்தில் அவர், வீரர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடினார். இந்த புகைப்படத்தை அவர் தனது எக்ஸ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சிறுவர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடியது அற்புதமான அனுபவமாக இருந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















