பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை எப்படி கொண்டாட முடியும்?: அண்ணாமலை கேள்வி
Jul 30, 2026, 10:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை எப்படி கொண்டாட முடியும்?: அண்ணாமலை கேள்வி

தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பது இந்துக் கலாச்சாரம் .

Murugesan M by Murugesan M
Aug 11, 2023, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழலுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் 12-வது நாளான நேற்று சிவகாசியில் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பட்டாசு தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்களிடம் புகார் மனுக்களைப் பெற்று கொண்டு யாத்திரையை மேற்கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
“இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 90 சதவீதம் பட்டாசும், 70 சதவீதம் தீப்பெட்டியும் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் மிகப்பெரிய அளவிலான அச்சுத்  தொழிலும் சிவகாசியில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. எந்த ஒரு நகரிலும் இது போன்ற தொழில் வளர்ச்சி இல்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், சீனப் பட்டாசுகளால் சிவகாசி அழிந்துக் கொண்டிருக்கிறது என மோடி பேசினார். மோடி பிரதமராக பதவியேற்ற பின் பட்டாசு பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு நவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் சீனப்  பட்டாசுகளுக்குத் தடை விதித்து பட்டாசு தொழிலுக்கும், மலிவு விலை சீன லைட்டர்களுக்குத்  தடை விதித்து தீப்பெட்டி தொழிலுக்கும் பிரதமர் மோடி ஆதரவாக உள்ளார்.

கடந்த ஆண்டு தடை இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடினோம். அதேபோல் இந்த ஆண்டும், தடை இல்லாத தீபாவளியாக கொண்டாடுவோம். பாஜக அரசு மத்தியில் ஆட்சியில் உள்ளதால் மட்டுமே சிவகாசியில் பட்டாசு தொழில் பிரச்சனை இன்றி வேகமாக வளர்ந்து வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவகாசி தொழில் வளர்ச்சிக்காக வரி சலுகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

வெளிநாட்டு என்.ஜி.ஓக்கள் மூலமாகவே பட்டாசு தொழிலுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இடையூறு ஏற்படுத்தப்படுகிறது. பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நிரந்தர தீர்வாக பட்டாசைத் தடை செய்ய வேண்டும் என திமுக அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்தார்.

கர்ம வீரர் காமராஜர் மூடிக் கிடந்த 6 ஆயிரம் பள்ளிகளையும், 12 ஆயிரம் புதிய பள்ளிகளையும் சேர்த்து 9 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 18 ஆயிரம் அரசு பள்ளிகளைத் திறந்தார். அதனால் 1954 கல்வி அறிவு பெற்றவர்கள் வெறும் 7 சதவீதம் தான். 1963ல் 37 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் காமராஜரின் சாதனைகளுக்குத்  திமுக ஸ்டிக்கர் ஓட்டி உரிமை கொண்டாடுகிறது.

தமிழகத்தில் உள்ள சிவகாசி, தென்காசி நகருக்கும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள காசி இரண்டுக்கும் உள்ளத் தொடர்பை உலகறிய செய்வதற்காக காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்தினார் மோடி.

பிரதமர் மோடி தமிழகத்தில் பிறக்காத தமிழனாக, செல்லும் இடங்களில் எல்லாம் தமிழின் பெருமையைத் குறித்து பேசி வருகிறார். ஆனால் தமிழகத்தில் பிறந்து தமிழகத்தில் வளர்ந்து தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவேன் என கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் கடன் வாங்குவதிலும், மது விற்பனையிலும் தான் முதல் மாநிலமாக மாற்றிருக்கிறார்.

மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் தொடங்கும் தமிழக அரசு, மது கடைகளை மூட முன்வரவில்லை. 2024 பாராளுமன்றத் தேர்தல் என்பது இளைஞர்களை படி, படி என்று கூறும் மோடிக்கும், குடி, குடி என்று கூறும் ஸ்டாலினுக்கும் இடையிலானது” என்று தெரிவித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை.

Tags: Yadrabjpbjp annamalaiannamalaiEn man En makkalsivakasi
ShareTweetSendShare
Previous Post

மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு !

Next Post

வீடு தேடி வருகிறது மத்திய அரசின் நலத்திட்டங்கள் : அண்ணாமலை

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies