உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம்: பிரதமர் மோடி உறுதி!
Aug 8, 2026, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம்: பிரதமர் மோடி உறுதி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 15, 2023, 04:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. தற்போது, 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. எனது அடுத்த 5 ஆண்டுகால ஆட்சியில் நாடு உலகின் 3-வது பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுக்கும். இது நரேந்திர மோடியின் வாக்குறுதி என்பது பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, “கொரோனாவுக்குப் பிறகு, உலகத்தையே வழிநடத்தும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. மேலும், புதிய உலக வரிசை, புதிய புவிசார் அரசியலை உருவாக்கி வருகிறது. சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவை நாட்டை மாற்றி வருகின்றன.

இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து நீடிக்க நிலையான அரசு தேவை. ஆகவே, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதியான மற்றும் நிலையான அரசு தேவை என்று மக்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே, எங்களை 2-வது முறையாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை வீணாக்கவில்லை. நாங்கள் 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, உலக பொருளாதாரத்தில் நம் நாடு 10-வது இடத்தில் இருந்தது. ஆனால், 140 கோடி மக்களின் முயற்சியால் தற்போது 5-வது இடத்திற்கு வந்து விட்டோம்.

இது எளிதாகவும், தானாகவும் நடக்கவில்லை. நாட்டை தனது பிடிக்குள் வைத்திருந்த ஊழல் அரங்கனை விரட்டிவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை வலுவான நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். அதேபோல, எனது அடுத்த 5 ஆண்டுகால ஆட்சியில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும். இது நரேந்திர மோடியின் வாக்குறுதி.

இது ஒருபுறம் இருக்க, கொரோனா தாக்கத்தில் இருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதோடு, ரஷ்யா-உக்ரைன் போர் மற்றொரு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தற்போது உலக பணவீக்கம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. நமது தேவைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும்போது, துரதிருஷ்டவசமாக பணவீக்கத்தையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. எனினும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

உலகின் மற்ற நாடுகளை விட, நமது நிலைமை சிறப்பாக இருக்கிறது என்பதற்காக நாம் திருப்தி அடைய முடியாது. பண வீக்கத்தின் சுமையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகும். அதேபோல, எல்லை கிராமங்கல் நாட்டின் கடைசி கிராமங்கள் என்று கூறினார்கள். அவை கடைசி கிராமங்கல் அல்ல, நாட்டின் முதல் கிராமங்கள். ஆகவேதான், எல்லை கிராமங்களைச் சேர்ந்த 600 பேரை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கச் செய்திருக்கிறோம்” என்று கூறினார்.

Tags: Narendra ModiModipm narendra modi speechindependence day76th independance day
Share
Tweet
SendShare
Previous Post

சுயநல சந்தர்ப்பவாத திமுக, காங்கிரஸ் கூட்டணியைப் புறக்கணிப்போம் – அண்ணாமலை.

Next Post

புதிதாக விஸ்வகர்மா திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Related News

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies