கண்ணா 2 லட்டு திங்க ஆசையா? குஷியில் 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்கள் – என்ன காரணம்?
Jun 15, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கண்ணா 2 லட்டு திங்க ஆசையா? குஷியில் 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்கள் – என்ன காரணம்?

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 23, 2023, 11:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்து வரும் 2024-ம் ஆண்டு முதல் 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

தேசியக் கல்விக் கொள்கை 2020 என்ற மசோதவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 2020-ம் ஆண்டு ஜூலை 29 -ம் தேதி வழங்கியது. இதன் மூலம் இந்தியாவில் புதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது . கடந்த 1986-ம் ஆண்டிலான , தேசிய கல்விக் கொள்கைகளுக்கு மாற்றாக இந்த புதிய கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை புதிய கல்விக் கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டது. இதில், கல்வியோடு, தொழிற்கல்வியையும் பயிற்றுவிக்கப்பட உள்ளது. வரும் 2030 -ம் ஆண்டுக்குள் இந்தியா முழுமைக்கும் புதிய கல்விக் கொள்கை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தீவிர முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையின்படி, 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக, 10 , 11 -ம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பில் ஆண்டு இறுதித் தேர்வு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதில், கிடைக்கும் மதிப்பெண்களை வைத்தே, ஒவ்வொரு மாணவரின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படுகிறது. இதனால், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கில், மாணவர்கள் பல மாதங்களாக இரவு -பகலாகப் படிக்கும் சூழ்நிலை இருந்து வந்தது. ஆனாலும், மாணவர்கள் சிலர் தோல்வி அடைந்து வரும் அவலம் நீடித்து வருகிறது. இதனால், மாணவர்கள் மனச் சோர்வு அடைவதாக பெற்றோர்கள் மத்தியில் புகார் எழுந்தது.

இதனைத்தடுக்கும் வகையிலும், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதனை நடைமுறைப்படுத்தும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி, மாணவர் ஒருவர், ஒரு தேர்வில், குறைவான மதிப்பெண் பெற்றாலும், அடுத்து வரும் தேர்தவில் கூடுதல் மதிப்பெண் பெற முடியும். மேலும், மாணவர்கள் கட்டாயம் இரண்டு மொழிகளைப் பயில வேண்டும் என்றும், அதில் ஒரு மொழி, இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றும், மற்றபடி மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில், பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வு எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, புரிதலுக்கு உரிய மதிப்பெண் அளிக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கையில் பாட திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.  இதனையொட்டி, புதிய பாட திட்ட புத்தங்கள் அச்சிடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இப்படி, மாணவர்களுக்கு நல்ல விஷயங்கள் இடம் பெற்றுள்ளதால், புதிய கல்விக் கொள்கைக்கு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல, மாணவர்களின் பெற்றோர்களும் இந்தத் திட்டத்தை இருகரம் கூப்பி வரவேற்பு கொடுக்கின்றனர் என்பதும் பிரதமர் நரேந்தர மோடிக்கு நன்றி தெரிவிக்கின்றனர் என்பதுவும்  குறிப்பிடத்தக்கது.

Tags: central government
ShareTweetSendShare
Previous Post

கஞ்சா கும்பல் அட்டூழியம்!.. காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்?.. பொதுமக்கள் அச்சம்!..

Next Post

தக்காளியை தொடர்ந்து பருப்பு விலை அதிகரிக்க வாய்ப்பு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies