“பிரிக்ஸ்” அமைப்பில் கூடுதலாக 6 நாடுகள்: பிரதமர் மோடி தகவல்!
Sep 6, 2026, 07:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பிரிக்ஸ்” அமைப்பில் கூடுதலாக 6 நாடுகள்: பிரதமர் மோடி தகவல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 07:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“பிரிக்ஸ்” நாடுகளின் கூட்டமைப்பில், சவூதி அரேபியா, ஐக்கிய அரசு அமீரகம், ஈரான், அர்ஜெண்டினா, எகிப்து ஆகிய 6 நாடுகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

“பிரிக்ஸ்” கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில், “பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் சவூதி அரேபியா, ஐக்கிய அரசு அமீரகம், ஈரான், எகிப்து, அர்ஜெண்டினா, எத்தியோப்பியா ஆகிய 6 நாடுகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர் சேர்க்கை 2024 ஜனவரி 1-ம் தேதி முதல் நடைபெறும்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 நாடுகளையும் வரவேற்கிறேன். அந்நாடுகளின் தலைவர்களுக்கும், மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட நாடுகளுடன் நெருங்கிய உறவுகளையும், வரலாற்று உறவுகளையும் கொண்டிருக்கும். ஆர்வத்தை வெளிப்படுத்தும் நாடுகளை சேர்ப்பதற்கும், மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் தயாராக இருக்கிறோம்.

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நேற்று நிலவில் மெதுவாக தரை இறங்கியது. சந்திரயான் வெற்றி இந்தியா சார்ந்தது மட்டுமல்ல. இந்த வெற்றிக்குப் பின்னால் உலக நாடுகளின் விஞ்ஞானிகளின் பங்களிப்பும் இருக்கிறது. ஆகவே, இந்திய மக்கள் சார்பிலும், இந்திய விஞ்ஞானிகள் சார்பிலும் உலக விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்றுத் தருணத்திற்கு வாழ்த்துகள்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நடந்த இந்த 3 நாள் சந்திப்பில் பல முடிவுகள் எடுக்கப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பிரிக்ஸ் அமைப்பின் விரிவாகத்துக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. இந்த ஆதரவு இனியும் தொடரும். பிரிக்ஸ் கூட்டமைப்பின் விரிவாக்கம், நவீனமயமாக்கல் ஆகியவை தற்போது முக்கிய தேவையாகும்” என்றார்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

ஜார்கண்ட் நிதியமைச்சர் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Next Post

பிரதமர் மோடியின் தேசப்பற்று: மெய்சிலிர்த்த தென்னாப்பிரிக்க அதிபர்!

Related News

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies