"மக்களுக்காக, மக்களால் என்ற ஜனநாயக கோட்பாட்டை பிறழாமல் பின்பற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி"!
Apr 22, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“மக்களுக்காக, மக்களால் என்ற ஜனநாயக கோட்பாட்டை பிறழாமல் பின்பற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி”!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் இன்று (31-08-23) நடைபெற்றது.

Murugesan M by Murugesan M
Aug 31, 2023, 07:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உள்ள பா.ஜ.க அலுவலமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் இன்று (31-08-23) நடைபெற்றது. இதில் பா.ஜ.க மூத்த நிா்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மூன்று தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1
”சந்திரனில் பாரதம் தடம் பதித்ததற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாராட்டு”
“சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்ற பாரதியின் நூற்றாண்டு கனவு இன்று மேடை தோறும் அவரை முழங்கும் பிரதமர் நரேந்திர மோடியால் நனவாகியுள்ளது. “சந்திரன் ஒளியில் அவளை கண்டேன்” என்ற பாரதியின் வரிகளுக்கு ஒப்ப “சிவசக்தி” என்று பெயரிட்டது போற்றுதலுக்கும், பெருமைக்கும் உரியது. தோல்வி கண்டு துவளாமல், வெற்றியை எப்படிச் சாதிப்பது என்பதற்கு சந்திராயன்-3 மிகச் சிறந்த உதாரணம். பாரில் பாரதத்தின் பெருமையை நிலைநாட்டி, இந்திய அறிவினை எடுத்துக்காட்டி, ஒவ்வொரு இந்தியனையும் பெருமைகொள்ள செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் , அவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து சாதனை படைக்க செய்த, பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் கோடானகோடி நன்றிகளும், பாராட்டுக்களும்.

தீர்மானம் – 2
சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்ததற்கு பாரத பிரதமர் அவர்களுக்கு நன்றி
தேசத்துப் பெண்களை தெய்வமென மதிக்கும் குணக்குன்று, நமது பாரதப் பிரதமர் அவர்கள். அவர்களின் அல்லல் நீக்கி, பெறாத பிள்ளையாய் துணை நிற்பவர் பிரதமர் அவர்கள். விழாக்காலங்களில் விலை மலிவு என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் என்பதை நன்கு அறிந்தவர். 2021ல், தீபாவளிக்கு பெட்ரோல் விலை குறைத்தார். இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தது இல்லத்தரசிகளுக்கு மிகப் பெரிய பரிசாகும். தேர்தலை முன்னிட்டு இல்லாமல், தேவையறிந்து , குடும்ப உறுப்பினரை போல, தேசத்து குடும்பங்களுக்கு இன்பத்தை வாரி வழங்கும் பாரத பிரதமர் அவர்களுக்கு அனைத்து தாய்மார்கள் சார்பிலும் நன்றி

தீர்மானம் – 3
மாநிலத் தலைவர் அவர்களின் இரண்டாம் கட்ட யாத்திரைக்கு வாழ்த்துக்கள்

“மக்களுக்காக”, “மக்களால்” என்ற ஜனநாயக கோட்பாட்டை பிறழாமல் பின்பற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான். திராவிட மாயையிலிருந்து தமிழகத்தை மீட்டு, அதன் புராதானத்தை, கலாச்சார தொன்மையினை மீட்டு. “செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே” என்ற பாரதியின் வரிகளை நனவாக்கும் முயற்சியில், பிரதமர் அவர்களோடு தோள் கொடுத்து உழைக்கும் நமது மாநில தலைவர், மதிப்பிற்குரிய அண்ணாமலை ஜி அவர்களின் “என் மண், என் மக்கள்” யாத்திரையின் முதற்கட்டம், எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. எதிர்கால தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக, ஒளிவு மறைவற்ற தலைவராக, உள்ளதை உள்ளபடி உரைக்கும் உன்னதராக இளைஞர்களும், மக்களும் தலைவர் அவர்களை பார்க்கிறார்கள்.
2ஆம் கட்ட யாத்திரையானது வருகின்ற செப்டம்பர் 4ந் தேதி தொடங்க உள்ளது. முதற்கட்டத்தை விட இது இன்னும் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. “பசி நோக்கார், கண் துஞ்சார்” என்ற தமிழ் கூற்றினர் போல, அயராது பாடுபடும் தலைவரின் முதற்கட்ட யாத்திரையின் நிறைவுக்கு பாராட்டுக்கள். இரண்டாம் கட்ட யாத்திரைக்கு வாழ்த்துக்கள் .

Tags: TamilNadu Bjpbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

அமர்நாத் யாத்திரை இன்றுடன் நிறைவு !

Next Post

மாதம் 1,000 புதிய உறுப்பினர்கள் – புதிய பாதையில் பாஜக!

Related News

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

சட்டமன்ற தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் – நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies