அமர்நாத் யாத்திரை இன்றுடன் நிறைவு !
Sep 6, 2026, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமர்நாத் யாத்திரை இன்றுடன் நிறைவு !

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெறும் அமர்நாத் வருடாந்திர யாத்திரை இன்றுடன் நிறைவடைகிறது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 31, 2023, 07:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 3888 மீட்டர் உயரம் உள்ள தெற்கு இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் புனித குகை கோவிலுக்கு வருடாந்திர யாத்திரை ஜூன் 1 ஆம் தேதி தொங்கி 62 நாட்கள் நாட்கள் கழித்து இன்றுடன் நிறைவடைகிறது.

பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் கந்தர்பால் பால்டால் மற்றும் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் ஆகிய இரண்டு வழித்தடங்களைப் பயன்படுத்தி அமர்நாத் புனிதக் குகைக்குப் பயணம் மேற்கொள்கிறார்கள்.

இதற்கிடையில், இன்று ஷ்ரவண பூர்ணிமாவை முன்னிட்டு அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள தேஜ்வாரி குக்கிராமத்தில் புராதன சோட்டா அமராந்த் ஜி குகைக்கு ஏராளமான யாத்ரீகர்கள், குறிப்பாக காஷ்மீர் பண்டிட்டுகள் அதிகாலையில் இருந்து சிவனை தரிசித்து வருகின்றனர்.

ரக்ஷா பந்தன் பண்டிகையுடன் இணைந்த ஷ்ரவண பூர்ணிமாவின் நல்ல நாளில்,மகந்த் தீபேந்திர கிரி தலைமையிலான புனித மஸ் சாரி முபாரக் இன்று அதிகாலை அமர்நாத் குகையை அடைந்தார், இதன் மூலம் இந்த ஆண்டு 62 நாட்கள் நீடித்த யாத்திரையின் நிறைவை இது குறிக்கிறது.

அமர்நாத் வளிமண்டலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய க்வாஞ்ச் குண்டுகள் சத்தத்திற்கு மத்தியில், சிவபெருமான் தனது சக்தி தேவியான பார்வதிக்கு அமர்கதை கூறிய புனித குகையில் பாரம்பரிய சடங்குகள் மற்றும் சாரி முபாரக்கின் பூஜையில் அர்ச்சனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டு அமர்நாத் வருடாந்திர யாத்திரையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுமார் 4.5 லட்சம் பக்தர்கள் புனிதக் குகையில் இயற்கையாக உருவாகிய பனி சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர். யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் தரிசனத்தை அமைதியான முறையில் நடத்த யூனியன் பிரதேசம் தேவையான ஏற்பாடுகளை செய்தது.

இதில் உள்ளூர் முஸ்லீம் மக்களும் யாத்திரைக்கு ஒத்துழைப்பு கொடுத்து உதவி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Devotionaljammu kashmirAmarnath
Share
Tweet
SendShare
Previous Post

செஸ் உலகக்கோப்பை போட்டியில் 7 இந்தியப் பெண்கள்!

Next Post

“மக்களுக்காக, மக்களால் என்ற ஜனநாயக கோட்பாட்டை பிறழாமல் பின்பற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி”!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies