இந்தியா- பாகிஸ்தான் மோதல்: வெல்லப்போவது யார்?
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா- பாகிஸ்தான் மோதல்: வெல்லப்போவது யார்?

இன்று மதியம் 3 மணிக்கு போட்டி தொடக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 01:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இலங்கையில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற இப்போட்டியானது மதியம் 3:00 மணிக்கு தொடங்குகிறது.

2023-ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகின்றன. இன்று இலங்கையில் நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெல்லப்போவது யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை, இதுவரை 7 முறை ஆசியக் கோப்பையை வென்றிருக்கிறது. ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணிதான் இதுவரை அதிக முறை கோப்பையை வென்றிருக்கிறது என்னும் பெருமையோடு உள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை 2 முறை மட்டுமே ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.

இந்திய அணியின் பலமாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர். போட்டி தொடக்கத்தில் இவர்கள் ஆட்டமிழக்காமல் இருந்தால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் தெரிவித்திருக்கிறார்கள். காரணம், இந்தியாவின் பலவீனமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

அதேசமயம், பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் மற்றும் ஃபகார் ஜமான் போன்றவர்களின் பேட்டிங் பலமாக உள்ளது. ஆசியக் கோப்பையில் ஏற்கெனவே நடந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இன்னிங்ஸ் முடிவில் மழை பெய்ததால் போட்டி ரத்துச் செய்யப்பட்டது. அப்போட்டியில் இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியின்போதும் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மழை வந்து ஆட்டம் தடைப்பட்டால் ரிசெர்வ் டே அதாவது அடுத்த நாள் போட்டி நடைபெறும் என்று கிரிக்கெட் குழு அறிவித்துள்ளது. அதேசமயம், போட்டி நடைபெற்றால் போதும் என்கிற மனநிலையில் இரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இப்போட்டியின் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் 59% இந்தியா வெற்றி பெறும் என்றும், 41% பாகிஸ்தான் வெற்றிபெறும் என்றும் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Tags: Asia cup cricket 2023india vs pakistanToday match
Share
Tweet
SendShare
Previous Post

நாசாவின் புதிய திட்டத்திற்குத் தலைவரான இந்தியர்!

Next Post

தமிழகத்திற்கு மத்திய அரசு தாராளம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies