14 விரைவு இரயில்களின் சேவை ரத்து!
Sep 14, 2026, 04:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

14 விரைவு இரயில்களின் சேவை ரத்து!

சுரங்கப் பாதை பணியால் தற்காலிக நிறுத்தம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 06:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுரங்கப் பாதை பணியின் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கும், திருப்பதியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கும் இயக்கப்படும் 14 விரைவு இரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு இரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜோலார்பேட்டை- கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே தற்காலிக கிர்டர் பொருத்தும் பணி, ஜோலார்பேட்டை- சோமநாயக்கன் பட்டிக்கு இடையே சுரங்க வழித்தடக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, 14 எக்ஸ்பிரஸ் இரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளன” என்று தெரிவித்துள்ளது.

அதன்படி, திருப்பதியில் இருந்து காலை 6.25 மணிக்கு இயக்கப்பட்டு வரும் திருப்பதி-எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் இரயில் செப்டம்பர் 12, 13, 14, 15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, சென்னை சென்ட்ரல்- திருப்பதிக்கு வருகிற 12, 13, 14, 15, 20, 21, 23, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்கு இயக்கப்படும் இரயில், திருப்பதி- சென்னை சென்ட்ரலுக்கு 12, 13,14, 15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் இரயில், சென்னை சென்ட்ரல்- மைசூருக்கு 12, 13, 14, 20, 21, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் காவிரி எக்ஸ்பிரஸ் இரயில், மைசூரு- சென்னை சென்ட்ரலுக்கு 13, 14, 15, 21, 22, 24 25 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் இரயில் என மொத்தம் 14 இரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

மேலும், 6 இரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல்- கே.எஸ்.ஆர். பெங்களூருவுக்கு 12-ம் தேதி இரவு 10.50 மணிக்குப் புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் இரயில் (12657) 1.30 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும். இது தவிர 6 இரயில்கள் குறிப்பிட்ட நாட்களில் நேரம் மாற்றி இயக்கப்பட உள்ளதாக இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: tirupathichennai centralexpress traincancellation
Share
Tweet
SendShare
Previous Post

சேகர்பாபுவுக்கு கெடு முடிவு: போராட்டத்துக்குத் தயாராகும் பா.ஜ.க.!

Next Post

விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடு?

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies