தேச துரோக சட்டப் பிரிவை நீக்கும் வழக்கு: அரசியல் சாசன அமர்வு மாற்றம்!
Jul 29, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேச துரோக சட்டப் பிரிவை நீக்கும் வழக்கு: அரசியல் சாசன அமர்வு மாற்றம்!

மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 12, 2023, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேச துரோக சட்டத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது. இப்பிரச்சனையை ஒத்திவைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1890-ம் ஆண்டு தேச துரோக வழக்கு 124ஏ கொண்டுவரப்பட்டது. இந்த சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை கடந்தாண்டு மே மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், தேச துரோக வழக்கின் 124ஏ பிரிவை தொடர்வது குறித்து மறு ஆய்வு நடத்தும்படியும், அதுவரை இச்சட்டத்தின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

இதன் பிறகு, கடந்த மே மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அச்சட்டப் பிரிவை திருத்துவது தொடர்பாக மறு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுகுப் பதிலாக புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த புதிய மசோதாக்களில் இருந்து சர்ச்சைக்குரிய தேசத் துரோகச் சட்டம் (ஐ.பி.சி.யின் பிரிவு 124 ஏ) ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம், அப்பிரிவுக்கு பதிலாக, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள் (சட்டப்பிரிவு 150) என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த செயலை செய்தாலும் பேசினாலும், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று புதிய சட்டப்பிரிவு 150 கூறுகிறது.

இந்த நிலையில், தேச துரோத சட்டப் பிரிவை எதிர்க்கும் வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடாளுமன்றததில் புதிதாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதைவை காரணம் காட்டிய மத்திய அரசின் உயர்மட்ட வழக்கறிஞர்கள், இந்த விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை நிராகரித்து விட்ட தலைமை நீதிபதி அமர்வு, மேற்கண்ட மனுக்களை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

Tags: supreme courtsedition lawreferredconstitution bench
ShareTweetSendShare
Previous Post

புடினைச் சந்தித்த கிம் ஜாங் உன் !

Next Post

டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி-நிதின் கட்கரி மறுப்பு

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies