தேச துரோக சட்டப் பிரிவை நீக்கும் வழக்கு: அரசியல் சாசன அமர்வு மாற்றம்!
Sep 13, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேச துரோக சட்டப் பிரிவை நீக்கும் வழக்கு: அரசியல் சாசன அமர்வு மாற்றம்!

மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 12, 2023, 06:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேச துரோக சட்டத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது. இப்பிரச்சனையை ஒத்திவைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1890-ம் ஆண்டு தேச துரோக வழக்கு 124ஏ கொண்டுவரப்பட்டது. இந்த சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை கடந்தாண்டு மே மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், தேச துரோக வழக்கின் 124ஏ பிரிவை தொடர்வது குறித்து மறு ஆய்வு நடத்தும்படியும், அதுவரை இச்சட்டத்தின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

இதன் பிறகு, கடந்த மே மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அச்சட்டப் பிரிவை திருத்துவது தொடர்பாக மறு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுகுப் பதிலாக புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த புதிய மசோதாக்களில் இருந்து சர்ச்சைக்குரிய தேசத் துரோகச் சட்டம் (ஐ.பி.சி.யின் பிரிவு 124 ஏ) ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம், அப்பிரிவுக்கு பதிலாக, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள் (சட்டப்பிரிவு 150) என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த செயலை செய்தாலும் பேசினாலும், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று புதிய சட்டப்பிரிவு 150 கூறுகிறது.

இந்த நிலையில், தேச துரோத சட்டப் பிரிவை எதிர்க்கும் வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடாளுமன்றததில் புதிதாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதைவை காரணம் காட்டிய மத்திய அரசின் உயர்மட்ட வழக்கறிஞர்கள், இந்த விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை நிராகரித்து விட்ட தலைமை நீதிபதி அமர்வு, மேற்கண்ட மனுக்களை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

Tags: supreme courtsedition lawreferredconstitution bench
Share
Tweet
SendShare
Previous Post

புடினைச் சந்தித்த கிம் ஜாங் உன் !

Next Post

டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி-நிதின் கட்கரி மறுப்பு

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies