2-வது நாளாக E.D. ரெய்டு: சிக்கிய மணல் குவாரி அதிபர்கள் - நடுங்கும் திமுக பிரபலங்கள்!
Jul 29, 2026, 09:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2-வது நாளாக E.D. ரெய்டு: சிக்கிய மணல் குவாரி அதிபர்கள் – நடுங்கும் திமுக பிரபலங்கள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணல் அதிபர்கள் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டைத் தொழிலதிபரும், திமுக அரசுக்கு மிகவும் நெருக்கமான மணல் குவாரி நடத்தி வருபவருமான இராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவினர் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நிஜாம் காலனி பகுதியில் உள்ள அவரது வேதாந்தா அலுவலகத்திற்குக் காலை 9.30 மணிக்கு 2 கார்களில் அதிகாரிகள் வந்தனர். இதில், ஒரு கார் கேரள பதிவு எண்ணும், மற்றொரு கார் சென்னை பதிவு எண்ணும் கொண்டதாக இருந்தது.

தொழிலதிபர் இராமச்சந்திரன் அலுவலகத்திற்குள் சென்ற அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் இரவு தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று காலை, அதாவது 2 -வது நாளான இன்று மீண்டும் சோதனையைத் தொடர்ந்து வருகின்றனர்.

அண்மையில் வெளியான ஒரு பிரபல திரைப்படத்தில் கதாநாயகனைப் போல், குறைந்த கால அளவில், பொருளாதாரத்தில் கரிகாலன் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தவர்.

மணல் தொழிலில் கரிகாலனை வளர்த்துவிட்டவர் ரத்னம். முன்பு சாதாரணமாக இருந்தவர், இப்போது கொடிகட்டி பறந்து வருகிறார். தற்போது BMW X7 உள்ளிட்ட 20 உயர் ரக கார்கள் உள்ளன.

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள ரத்தினத்தின் உறவினரான கரிகாலன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள கட்டுமான அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2016 ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடைபெற்றபோது, மணல் தொழிலில் இவர் வரி ஏய்ப்பு செய்ததாகவும், இதன் காரணமாக, வருமான வரித்துறையினர் 20 இடங்களில் சோதனை நடத்திய நிலையில், தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த சிலர் மணல் குவாரி விவகாரத்தில் சிக்கியுள்ளதால், இந்த ரெய்டு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் நடுக்கத்தில் உள்ளனர்.

சோதனை நடைபெறும் இடங்களில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: ED RAID
ShareTweetSendShare
Previous Post

கேமரா ஊழலில் சிக்கிய கேரள அரசு – சட்ட சபையில் அமளி, துமளி!

Next Post

பாரத நாடாளுமன்ற ஊழியர்களுக்குப் புதிய சீருடை!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies