2-வது நாளாக E.D. ரெய்டு: சிக்கிய மணல் குவாரி அதிபர்கள் - நடுங்கும் திமுக பிரபலங்கள்!
Sep 13, 2026, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2-வது நாளாக E.D. ரெய்டு: சிக்கிய மணல் குவாரி அதிபர்கள் – நடுங்கும் திமுக பிரபலங்கள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 01:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மணல் அதிபர்கள் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டைத் தொழிலதிபரும், திமுக அரசுக்கு மிகவும் நெருக்கமான மணல் குவாரி நடத்தி வருபவருமான இராமச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவினர் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நிஜாம் காலனி பகுதியில் உள்ள அவரது வேதாந்தா அலுவலகத்திற்குக் காலை 9.30 மணிக்கு 2 கார்களில் அதிகாரிகள் வந்தனர். இதில், ஒரு கார் கேரள பதிவு எண்ணும், மற்றொரு கார் சென்னை பதிவு எண்ணும் கொண்டதாக இருந்தது.

தொழிலதிபர் இராமச்சந்திரன் அலுவலகத்திற்குள் சென்ற அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் இரவு தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று காலை, அதாவது 2 -வது நாளான இன்று மீண்டும் சோதனையைத் தொடர்ந்து வருகின்றனர்.

அண்மையில் வெளியான ஒரு பிரபல திரைப்படத்தில் கதாநாயகனைப் போல், குறைந்த கால அளவில், பொருளாதாரத்தில் கரிகாலன் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தவர்.

மணல் தொழிலில் கரிகாலனை வளர்த்துவிட்டவர் ரத்னம். முன்பு சாதாரணமாக இருந்தவர், இப்போது கொடிகட்டி பறந்து வருகிறார். தற்போது BMW X7 உள்ளிட்ட 20 உயர் ரக கார்கள் உள்ளன.

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள ரத்தினத்தின் உறவினரான கரிகாலன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள கட்டுமான அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2016 ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடைபெற்றபோது, மணல் தொழிலில் இவர் வரி ஏய்ப்பு செய்ததாகவும், இதன் காரணமாக, வருமான வரித்துறையினர் 20 இடங்களில் சோதனை நடத்திய நிலையில், தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த சிலர் மணல் குவாரி விவகாரத்தில் சிக்கியுள்ளதால், இந்த ரெய்டு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் நடுக்கத்தில் உள்ளனர்.

சோதனை நடைபெறும் இடங்களில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: ED RAID
Share
Tweet
SendShare
Previous Post

கேமரா ஊழலில் சிக்கிய கேரள அரசு – சட்ட சபையில் அமளி, துமளி!

Next Post

பாரத நாடாளுமன்ற ஊழியர்களுக்குப் புதிய சீருடை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies