மெட்ரோ இரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி!
Sep 13, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெட்ரோ இரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி!

பிரதமருடன் செல்ஃபி எடுத்து பயணிகள் பிறந்தநாள் வாழ்த்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 17, 2023, 01:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் துவாரகாவிலிருந்து விமான நிலையம் வரையிலான மெட்ரோ இரயில் சேவையைத் தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அதே மெட்ரோ இரயிலில் பயணம் செய்தார். அப்போது, பிரதமருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பயணிகள், பிரதமருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினர்.

இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி துவாரகாவில் பி.எம். விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், துவாரகாவில் “யஷோபூமி” என்று அழைக்கப்படும், இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் (ஐ.ஐ.சி.சி.) கட்டம் 1-ஐ பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார்.

இதற்கிடையே, துவாரகா செக்டார் 21-லிருந்து புதிய மெட்ரோ நிலையமான ‘யஷோபூமி துவாரகா செக்டர் 25’ வரையிலான டெல்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையின் விரிவாக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதாவது, டெல்லி மெட்ரோவின் 2 கி.மீ. நீளமுள்ள ‘யஷோபூமி லைன்’ துவாரகா செக்டார் 21 மற்றும் இந்தியா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டரை இணைக்கும் மெட்ரோ இரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இப்பிரிவைச் சேர்ப்பதன் மூலம், புது டெல்லியில் இருந்து யஷோபூமி துவாரகா செக்டார் 25 வரையிலான விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைனின் மொத்த நீளம் 24.9 கி.மீட்டராக உயரும் என்று டெல்லி மெட்ரோ இரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும், இன்று முதல் டெல்லி மெட்ரோ விமான நிலைய விரைவுப் பாதையில் மெட்ரோ ரயில்களின் இயக்க வேகத்தை மணிக்கு 90 கி.மீட்டரிலிருந்து 120 கி.மீட்டராக அதிகரித்து பயண நேரத்தை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விழா நிறைவடைந்ததும், டெல்லி மெட்ரோ இரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி, பயணிகளுடன் உரையாடினார். அப்போது, பயணிகள் பலரும் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதோடு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்தனர்.

Tags: PM Modidelhi metro railinagurate
Share
Tweet
SendShare
Previous Post

“யஷோபூமி” : நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார் !

Next Post

வாட்ஸ்அப் சேனல் தொடங்கினார் உ.பி முதல்வர் .

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies