ஹேமந்த் சோரன் மனு: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு!
Jul 29, 2026, 08:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹேமந்த் சோரன் மனு: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு!

அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக தாக்கல் செய்தார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 18, 2023, 11:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுரங்க ஊழல், நிலம் மற்றும் பண மோசடி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை, ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தி இருக்கிறது.

ஜார்கண்ட் மாநில முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன், சுரங்கத்துறை அமைச்சர் பொறுப்பையும் தன் வசம் வைத்திருக்கிறார். இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு தனக்குத் தானே சுரங்க ஒப்பந்தத்தை ஒதுக்கிக் கொண்டார். மேலும், இதன் மூலம் நிலம் மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை, மேற்கண்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த 6 மாதங்களில் 4 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஒரு முறை மட்டுமே ஆஜரான ஹேமந்த் சோரன், அதன் பிறகு ஆஜராகவில்லை. மேலும், அமலாக்கத்துறை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மிரட்டி இருந்தார்.

இந்த நிலையில், செப்டம்பர் 23-ம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, அமலாக்கத்துறை சம்மனை திரும்பப் பெறக்கோரி, தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், எதிர்கட்சிகளை பழிவாங்கும் கருவியாக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது. பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக வலுவான “இண்டி” கூட்டணி அமைக்கப்பட்டிருப்பதால், அமலாக்கத்துறையின் வேகம் அதிகரித்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹேமந்த் சோரனின் மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமர்வு, ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தி இருக்கிறது.

Tags: supreme courtJharkhandCM Hemant SorenED summonsplearefuses
ShareTweetSendShare
Previous Post

எச்-1 பி விசா திட்டத்தை நிறுத்துவேன் – விவேக் ராமசாமி

Next Post

மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழு மறுசீரமைப்பு!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies