இம்ரான் கான் வேறு சிறைக்கு மாற்றம்!
Sep 13, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இம்ரான் கான் வேறு சிறைக்கு மாற்றம்!

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 26, 2023, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கும் மாற்றும்படி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து, இம்ரான் கானை அடியாலா சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். 2018 முதல் 2022-ம் வருடம் வரை பிரதமராக இருந்தார். இவரது ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது. இதனால், மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

இதைக் காரணமாக வைத்து இம்ரானின் கூட்டணியில் இருந்த முக்கியக் கட்சி ஒன்று, எதிர்கட்சியுடன் இணைந்தது. இதனால் 2022-ம் ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து இவரது அரசு கலைந்தது.

இதன் பிறகு, இம்ரான் கான் மீது ஊழல், முறைகேடு, கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் தோஷகானா எனப்படும் அரசுக்குச் சொந்தமான பொருட்களை விற்று மோசடி செய்த வழக்கும் ஒன்று. இவ்வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, பஞ்சாப் மாகாணத்திலுள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால், அந்த சிறையில் இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதோடு அவர் முன்னாள் பிரதமர் என்பதால் அவருக்கு ஏ வசதி கொண்ட வேறு சிறைக்கு மாற்றும்படி அவரது மனைவி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதேபோல, இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்தவர்களும், அவரது உடல்நலம், சமூக மற்றும் அரசியல் அந்தஸ்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஏ வகுப்பு வசதிகள் கொண்ட சிறைக்கு மாற்றும்படி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், இம்ரான் கானை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றும்படி உத்தரவிட்டது.

இதையடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அடியாலா சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன. இதனிடையே, இன்னும் 5 மாதங்களில் (அடுத்தாண்டு பிப்ரவரி மாதம்) பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்குள் இந்த வழக்கிலிருந்து விடுதலையானால் மட்டுமே இம்ரான் கானால் தேர்தலில் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistanimran khanFormer PMadiala prison
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையே ரோஜ்கர் மேளா!

Next Post

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies