இம்ரான் கான் வேறு சிறைக்கு மாற்றம்!
Jul 29, 2026, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இம்ரான் கான் வேறு சிறைக்கு மாற்றம்!

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 26, 2023, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கும் மாற்றும்படி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து, இம்ரான் கானை அடியாலா சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். 2018 முதல் 2022-ம் வருடம் வரை பிரதமராக இருந்தார். இவரது ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது. இதனால், மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

இதைக் காரணமாக வைத்து இம்ரானின் கூட்டணியில் இருந்த முக்கியக் கட்சி ஒன்று, எதிர்கட்சியுடன் இணைந்தது. இதனால் 2022-ம் ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து இவரது அரசு கலைந்தது.

இதன் பிறகு, இம்ரான் கான் மீது ஊழல், முறைகேடு, கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் தோஷகானா எனப்படும் அரசுக்குச் சொந்தமான பொருட்களை விற்று மோசடி செய்த வழக்கும் ஒன்று. இவ்வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, பஞ்சாப் மாகாணத்திலுள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால், அந்த சிறையில் இம்ரான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதோடு அவர் முன்னாள் பிரதமர் என்பதால் அவருக்கு ஏ வசதி கொண்ட வேறு சிறைக்கு மாற்றும்படி அவரது மனைவி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதேபோல, இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்தவர்களும், அவரது உடல்நலம், சமூக மற்றும் அரசியல் அந்தஸ்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஏ வகுப்பு வசதிகள் கொண்ட சிறைக்கு மாற்றும்படி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், இம்ரான் கானை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றும்படி உத்தரவிட்டது.

இதையடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அடியாலா சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன. இதனிடையே, இன்னும் 5 மாதங்களில் (அடுத்தாண்டு பிப்ரவரி மாதம்) பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்குள் இந்த வழக்கிலிருந்து விடுதலையானால் மட்டுமே இம்ரான் கானால் தேர்தலில் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistanimran khanFormer PMadiala prison
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையே ரோஜ்கர் மேளா!

Next Post

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies