ஞானவாபி மசூதி விவகாரம்: இந்துகள் தரப்பில் புதிய மனு!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி விவகாரம்: இந்துகள் தரப்பில் புதிய மனு!

பாதாள அறையை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கக் கோரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 26, 2023, 05:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஞானவாபி மசூதி வழக்கில் இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், வியாஸ் குடும்பத்தினர் வசம் இருக்கும் வளாகத்தின் பாதாள அறையை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்கக் கோரி, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலின் அருகிலேயே ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இந்த மசூதி 17-ம் நூற்றாண்டில் மொகலாய அரசர் ஒளரங்கசீப்பால் இந்துக் கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்று இந்துக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக, இந்து பெண்கள் தாக்கல் செய்ய மனுவின் அடிப்படையில், வாரணாசி நீதிமன்றம் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை நாடியும் பலனில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி முதல் இந்திய தொல்லியல் துறையினர் ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், இந்துக்கள் தரப்பில் வாரணாசி நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில், வியாஸ் குடும்பத்தினர் வசம் இருக்கும் தங்கானா எனப்படும் தெற்கு பகுதி பாதாள அறையை மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில், “வியாஸ் குடும்பத்தினர் சார்பாக, வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் நாங்கள் ஒரு சிவில் வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறோம். மேலும், மற்ற வழக்குகளைப் போலவே இவ்வழக்கின் அசல் விசாரணையையும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிபதி முன்பு விண்ணப்பித்திருக்கிறோம்.

இம்மனுவிலுள்ள முக்கியக் கோரிக்கை என்னவென்றால், மசூதியின் தெற்குப் பகுதியில் உள்ள பாதாள அறையை அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி கமிட்டி கையகப்படுத்தலாம். எனவே, அந்த அடித்தளத்தை உடனடியாக மாவட்ட நீதிபதி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

இன்று எங்களின் இடமாறுதல் விண்ணப்பத்தின் மீதான விசாரணை நடந்தது. அப்போது, இந்த வழக்கில் அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி ஆஜராகி பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல, இடமாற்ற விண்ணப்பத்தின் மீது நாளை உத்தரவு வரும். இதன் பிறகு, இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

1991-ம் ஆண்டு, வியாஸ் குடும்பத்தினர் ஞானவாபி மசூதி கட்டமைப்பை இந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தனர். மேலும், மசூதியின் மேல் அமைப்பு, நமாஸ் செய்யப்படும் இடம் மற்றும் குவிமாடங்கள் தவிர, முழு அமைப்பும் காசி விஸ்வநாதர் கோவிலில் இருக்கிறது என்று கூறியிருந்தனர். இக்குடும்பத்தினர் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் ஞானவாபி மசூதி வளாகத்தில் வசிக்கவில்லை என்றாலும், மசூதியின் 4 பாதாள அறைகளில் ஒன்று இன்னும் இவர்கள் வசம்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Gnanavabi MosqueHindu Sidenew plea
Share
Tweet
SendShare
Previous Post

வரலாற்றுச் சாதனைப் படைத்த இந்தியா : பிரதமர் மோடி வாழ்த்து !

Next Post

போராட்டத்திற்குத் தயாராகும் சென்னை மக்கள் – என்ன காரணம்?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies