மேகாலயா பி.எஸ்.எஃப். அமிர்த கலச யாத்திரை!
Jul 31, 2026, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேகாலயா பி.எஸ்.எஃப். அமிர்த கலச யாத்திரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என் மண் என் தேசம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், அமிர்த கலச யாத்திரையை தொடங்கி இருக்கிறார்கள்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, சுதந்திரத்துக்கும், பாதுகாப்புக்கும் பங்களித்த வீரமிக்க வீரர்கள் மற்றும் குடிமக்களின் தியாகங்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தும் வகையில், அமிர்த கலச யாத்திரை நடத்தப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி அமிர்த கலச யாத்திரையைத் தொடங்கி வைத்தார்.

இந்த இயக்கத்தின் மூலம், அமிர்த கலச யாத்திரை என்கிற பெயரில், நாடு முழுவதிலும் இருந்து சிறிய அளவிலான 7,500 பானைகளில் மண் மற்றும் மரக்கன்றுகள், செடிகள் சேகரிக்கப்படும். இவை டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு, போர் நினைவிடத்தில் கொட்டப்பட்டு, மிகப்பெரிய அளவிலான பூங்கா அமைக்கப்படும்.

மேலும், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இந்த முன்னெடுப்பில் நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பங்கெடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜ.க.வினரால் அமிர்த கலச யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், முதல் முறையாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் அமிர்த கலச யாத்திரையில் பங்கேற்றிருக்கிறார்கள்.

மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், என் மண் என் தேசம் என்கிற அமிர்த கலச யாத்திரையை தொடங்கி இருக்கிறார்கள். அதன்படி, மாநிலத்தின் ​கிழக்கு காசி மலைகள் மற்றும் மேற்கு ஜெயந்தியா மலை மாவட்டங்களில் உள்ள எல்லையோர கிராமங்களான லிங்காட், பைர்த்வா, உம்சியம், டாவ்கி, காங்வாங் ஆகிய கிராமங்களில் இருந்து மண் மற்றும் செடிகள் சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிராம மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியதினர்.

Tags: BSFamrit kalash yatrameghalayaOrganize
ShareTweetSendShare
Previous Post

2000 ரூபாய் : கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது!

Next Post

35 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல்!

Related News

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies