மேகாலயா பி.எஸ்.எஃப். அமிர்த கலச யாத்திரை!
Jun 15, 2026, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேகாலயா பி.எஸ்.எஃப். அமிர்த கலச யாத்திரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என் மண் என் தேசம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், அமிர்த கலச யாத்திரையை தொடங்கி இருக்கிறார்கள்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, சுதந்திரத்துக்கும், பாதுகாப்புக்கும் பங்களித்த வீரமிக்க வீரர்கள் மற்றும் குடிமக்களின் தியாகங்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தும் வகையில், அமிர்த கலச யாத்திரை நடத்தப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி அமிர்த கலச யாத்திரையைத் தொடங்கி வைத்தார்.

இந்த இயக்கத்தின் மூலம், அமிர்த கலச யாத்திரை என்கிற பெயரில், நாடு முழுவதிலும் இருந்து சிறிய அளவிலான 7,500 பானைகளில் மண் மற்றும் மரக்கன்றுகள், செடிகள் சேகரிக்கப்படும். இவை டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு, போர் நினைவிடத்தில் கொட்டப்பட்டு, மிகப்பெரிய அளவிலான பூங்கா அமைக்கப்படும்.

மேலும், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இந்த முன்னெடுப்பில் நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பங்கெடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜ.க.வினரால் அமிர்த கலச யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், முதல் முறையாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் அமிர்த கலச யாத்திரையில் பங்கேற்றிருக்கிறார்கள்.

மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், என் மண் என் தேசம் என்கிற அமிர்த கலச யாத்திரையை தொடங்கி இருக்கிறார்கள். அதன்படி, மாநிலத்தின் ​கிழக்கு காசி மலைகள் மற்றும் மேற்கு ஜெயந்தியா மலை மாவட்டங்களில் உள்ள எல்லையோர கிராமங்களான லிங்காட், பைர்த்வா, உம்சியம், டாவ்கி, காங்வாங் ஆகிய கிராமங்களில் இருந்து மண் மற்றும் செடிகள் சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிராம மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியதினர்.

Tags: BSFamrit kalash yatrameghalayaOrganize
ShareTweetSendShare
Previous Post

2000 ரூபாய் : கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது!

Next Post

35 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies