மேகாலயா பி.எஸ்.எஃப். அமிர்த கலச யாத்திரை!
Apr 29, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேகாலயா பி.எஸ்.எஃப். அமிர்த கலச யாத்திரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என் மண் என் தேசம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், அமிர்த கலச யாத்திரையை தொடங்கி இருக்கிறார்கள்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, சுதந்திரத்துக்கும், பாதுகாப்புக்கும் பங்களித்த வீரமிக்க வீரர்கள் மற்றும் குடிமக்களின் தியாகங்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தும் வகையில், அமிர்த கலச யாத்திரை நடத்தப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி அமிர்த கலச யாத்திரையைத் தொடங்கி வைத்தார்.

இந்த இயக்கத்தின் மூலம், அமிர்த கலச யாத்திரை என்கிற பெயரில், நாடு முழுவதிலும் இருந்து சிறிய அளவிலான 7,500 பானைகளில் மண் மற்றும் மரக்கன்றுகள், செடிகள் சேகரிக்கப்படும். இவை டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு, போர் நினைவிடத்தில் கொட்டப்பட்டு, மிகப்பெரிய அளவிலான பூங்கா அமைக்கப்படும்.

மேலும், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இந்த முன்னெடுப்பில் நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பங்கெடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜ.க.வினரால் அமிர்த கலச யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், முதல் முறையாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் அமிர்த கலச யாத்திரையில் பங்கேற்றிருக்கிறார்கள்.

மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், என் மண் என் தேசம் என்கிற அமிர்த கலச யாத்திரையை தொடங்கி இருக்கிறார்கள். அதன்படி, மாநிலத்தின் ​கிழக்கு காசி மலைகள் மற்றும் மேற்கு ஜெயந்தியா மலை மாவட்டங்களில் உள்ள எல்லையோர கிராமங்களான லிங்காட், பைர்த்வா, உம்சியம், டாவ்கி, காங்வாங் ஆகிய கிராமங்களில் இருந்து மண் மற்றும் செடிகள் சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிராம மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியதினர்.

Tags: BSFamrit kalash yatrameghalayaOrganize
ShareTweetSendShare
Previous Post

2000 ரூபாய் : கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது!

Next Post

35 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies