கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு டெல்லி கலவரத்தில் தொடர்பு!
Apr 29, 2026, 10:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு டெல்லி கலவரத்தில் தொடர்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 5, 2023, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் கடந்த அக்டோபர் 2-ம் தேதி கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு டெல்லி கலவர வழக்கில் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாமைச் சேர்ந்த பொறியாளரான ஷாநவாஸ் சஃபி உஸாமா, தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ.) தேடப்படும் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். மேலும், இவரைப் பற்றி துப்புக் கொடுப்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுவதோடு, துப்புக் கொடுப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர், சந்தேகத்தின் பேரில் ஷாநவாஸ், ரிஸ்வான், அர்ஷத் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், 3 பேருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதும், நாட்டின் பல்வேறு இடங்களில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில்தான், இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, கைது செய்யப்பட்ட அர்ஷத், டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர், கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மேலும், 2020-ம் ஆண்டு சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக்கில் நடந்த கலவரத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.

மேலும், மகாராஷ்டிர மாநிலம் புனே காவல்துறையில் இருந்து தப்பிய, என்.ஐ.ஏ.வால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஷாநவாஸுக்கு டெல்லியில் அடைக்கலம் கொடுத்தது இந்த அர்ஷத்தான். இருவருக்கும் நீண்டகாலமாக பழக்கம் என்பதும், இருவரும் சேர்ந்து தீவிரவாத செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்திருக்கிறது.

Tags: isis terroristsconspireddelhi riots
ShareTweetSendShare
Previous Post

யூடியூபர் வாசனின் பைக்கை எரித்துவிட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்!

Next Post

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies