கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு டெல்லி கலவரத்தில் தொடர்பு!
Aug 7, 2026, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு டெல்லி கலவரத்தில் தொடர்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 5, 2023, 02:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் கடந்த அக்டோபர் 2-ம் தேதி கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு டெல்லி கலவர வழக்கில் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாமைச் சேர்ந்த பொறியாளரான ஷாநவாஸ் சஃபி உஸாமா, தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ.) தேடப்படும் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். மேலும், இவரைப் பற்றி துப்புக் கொடுப்பவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுவதோடு, துப்புக் கொடுப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர், சந்தேகத்தின் பேரில் ஷாநவாஸ், ரிஸ்வான், அர்ஷத் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், 3 பேருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதும், நாட்டின் பல்வேறு இடங்களில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில்தான், இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, கைது செய்யப்பட்ட அர்ஷத், டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர், கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மேலும், 2020-ம் ஆண்டு சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக்கில் நடந்த கலவரத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.

மேலும், மகாராஷ்டிர மாநிலம் புனே காவல்துறையில் இருந்து தப்பிய, என்.ஐ.ஏ.வால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஷாநவாஸுக்கு டெல்லியில் அடைக்கலம் கொடுத்தது இந்த அர்ஷத்தான். இருவருக்கும் நீண்டகாலமாக பழக்கம் என்பதும், இருவரும் சேர்ந்து தீவிரவாத செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்திருக்கிறது.

Tags: isis terroristsconspireddelhi riots
Share
Tweet
SendShare
Previous Post

யூடியூபர் வாசனின் பைக்கை எரித்துவிட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்!

Next Post

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies