2 ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித்ஷா உறுதி!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித்ஷா உறுதி!

நக்ஸலிசம் மனிதகுலத்திற்கு சாபம் என்றும் வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 6, 2023, 08:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அடுத்த 2 ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதமும், நக்ஸலிசமும் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

இடதுசாரி தீவிரவாதம் குறித்த ஆய்வுக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை இணை அமைச்சர் அஸ்வினி சௌபே, தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை பணியகத்தின் இயக்குனர் தபன் டேகா மற்றும் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குனர் ஜெனரல்கள் சஷாஸ்த்ரா சீமா பால் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸார் மற்றும் உள்துறைச் செயலாளர்கள், நக்சல் பாதித்த மாநிலங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தை தொடங்கி வைத்த உள்துறை செயலாளர் அஜய் பல்லா, கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினார். தொடர்ந்து, கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “கடந்த 4 தசாப்தங்களில் 2022-ம் ஆண்டுதான் இடதுசாரித் தீவிரவாதத்தால் ஏற்பட்ட வன்முறை மற்றும் இறப்புகள் குறைந்தளவில் பதிவாகி உள்ளன. நாட்டிலிருந்து இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக வேரறுப்பதற்கான வரைபடத்தை தயாரிப்பதை இக்கூட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

முன்னதாக, இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நக்ஸலிசம் மனிதகுலத்திற்கு ஒரு சாபமாகும். அதை அனைத்து வடிவங்களிலும் வேரோடு பிடுங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான நமது முயற்சிகளை முன்னெடுப்பதற்காக, டெல்லியில் இன்று நடைபெறும் இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான மறு ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறேன். இடதுசாரி தீவிரவாதம் இல்லாத தேசம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Naxalism is a curse to humanity and we are resolved to uproot it in all its forms.

I look forward to chairing the Review Meeting on Left Wing Extremism (LWE) in New Delhi today to further our efforts to fulfil PM @narendramodi Ji’s vision of an LWE-free nation. https://t.co/l3bEtP0Vv3

— Amit Shah (@AmitShah) October 6, 2023

 

Tags: left wing extremismhome minister amit shah
Share
Tweet
SendShare
Previous Post

நெதர்லாந்துக்கு 287 ரன்கள் இலக்கு !

Next Post

இமாச்சலப் பிரதேசத்தின் உனா மற்றும் காங்க்ரா பிராந்தியத்திற்கு ரூ .154.25 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies