காவிரி ஆணையம்! - 3,000 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடும்படி உத்தரவு!
Sep 12, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரி ஆணையம்! – 3,000 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடும்படி உத்தரவு!

காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையை, காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்தது!

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 06:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்துக்கு வரும் 16ல் துவங்கி 30ம் தேதி வரையில் 15 நாட்கள், வினாடிக்கு 3,000 கன அடி வீதம், காவிரி நீரை  திறந்துவிட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையை, காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்து, தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் கடந்த மாதம் 29ல் கூடியது. அக்கூட்டத்தின் முடிவில், 3,000 கன அடி நீரை, தமிழகத்துக்கு திறந்துவிடும்படி உத்தரவிடப்பட்டது. ஆனாலும், இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக, கர்நாடகாவில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் பெரும் போராட்டத்தில் இறங்கின. இதனால், மிகக்குறைந்த நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டது. இதற்கும் அம்மாநில விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ‘காணொலி காட்சி’ வாயிலாக நடந்த இந்த கூட்டத்திற்கு, குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமை வகித்தார். தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மழை பொழிவு மற்றும் அணைகளில் நீர் இருப்பு உள்ளிட்ட அனைத்து புள்ளி விபரங்களையும் அலசி ஆராய்ந்து, இறுதியாக, 3,000 கன அடி நீரை, தமிழகத்துக்கு திறந்து விட வேண்டுமென ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது.

இந்த நீரை, வரும் 16ல் துவங்கி 30ம் தேதி வரையில், தமிழக – கர்நாடக எல்லையான பில்லிகுண்டுலுவில் திறந்துவிட அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை ஏற்று அக்டோபர் 16 முதல் 30ம் தேதி வரை தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட்டுள்ளது.

Tags: tamilnaduCauvery Management Authority
Share
Tweet
SendShare
Previous Post

புதிய விருதுடன் தில்லாக நிற்கும் கில் !

Next Post

மணல் கடத்தலைத் தடுக்கும் அதிகாரிகளைக் கொலைச் செய்யும் திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies