காவிரி ஆணையம்! - 3,000 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடும்படி உத்தரவு!
Jul 29, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரி ஆணையம்! – 3,000 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடும்படி உத்தரவு!

காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையை, காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்தது!

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 06:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்துக்கு வரும் 16ல் துவங்கி 30ம் தேதி வரையில் 15 நாட்கள், வினாடிக்கு 3,000 கன அடி வீதம், காவிரி நீரை  திறந்துவிட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையை, காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்து, தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் கடந்த மாதம் 29ல் கூடியது. அக்கூட்டத்தின் முடிவில், 3,000 கன அடி நீரை, தமிழகத்துக்கு திறந்துவிடும்படி உத்தரவிடப்பட்டது. ஆனாலும், இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக, கர்நாடகாவில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் பெரும் போராட்டத்தில் இறங்கின. இதனால், மிகக்குறைந்த நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டது. இதற்கும் அம்மாநில விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ‘காணொலி காட்சி’ வாயிலாக நடந்த இந்த கூட்டத்திற்கு, குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமை வகித்தார். தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மழை பொழிவு மற்றும் அணைகளில் நீர் இருப்பு உள்ளிட்ட அனைத்து புள்ளி விபரங்களையும் அலசி ஆராய்ந்து, இறுதியாக, 3,000 கன அடி நீரை, தமிழகத்துக்கு திறந்து விட வேண்டுமென ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது.

இந்த நீரை, வரும் 16ல் துவங்கி 30ம் தேதி வரையில், தமிழக – கர்நாடக எல்லையான பில்லிகுண்டுலுவில் திறந்துவிட அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டில்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை ஏற்று அக்டோபர் 16 முதல் 30ம் தேதி வரை தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட்டுள்ளது.

Tags: tamilnaduCauvery Management Authority
ShareTweetSendShare
Previous Post

புதிய விருதுடன் தில்லாக நிற்கும் கில் !

Next Post

மணல் கடத்தலைத் தடுக்கும் அதிகாரிகளைக் கொலைச் செய்யும் திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு.

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies