அரிகண்ட சிற்பம்: பாதுகாக்க வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை!
Jul 29, 2026, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரிகண்ட சிற்பம்: பாதுகாக்க வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள புதூர் பகுதியில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிகண்டம் சிற்பம் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதூரில் இருந்து மடப்புரம் செல்லும் வழியில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிகண்ட சிற்பம், பல்வேறு கால கல்வெட்டு உட்பட பல சிற்பங்கள் காணப்படுகிறது. அரிகண்டம் என்பது, மன்னன் போரில் வெற்றி பெற வேண்டியோ, நோயிலிருந்து மீளவோ காளி தேவியிடம் வேண்டிக்கொண்டு போரில் வெற்றி பெற்ற பிறகு அல்லது உடல் நலம் சரியான பிறகு தன் தலையைத் தானே அரிந்து உயிர் விடுதல் ஆகும். நவகண்டம் என்பது ஒன்பது இடங்களில் வெட்டி, உடம்பை ஒன்பது கண்டங்களாக்கி உயிரைத் துறப்பது ஆகும்.

இதுகுறித்து ஆய்வாளர் காளைராஜன் கூறியதாவது, அரிகண்ட சிற்பம் காளிக்கு வேண்டுதல் நிறைவேற தன்னைத்தானே பலி கொடுத்தலை குறிப்பதாகும். அரி என்றால் நறுக்கி என்பது அர்த்தம். அரிகண்ட சிற்பம், நவகண்ட சிற்பம் என இரு வகை சிற்பங்கள் உள்ளன.

மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளதால், காளிக்கு பலி கொடுத்தல் குறித்த சிற்பமாக அரிகண்ட சிற்பம் இருக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக, திருப்புவனகாசி என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மடப்புரம் கோவிலில் அம்மனுக்கு இருபுறமும் சித்திரசரிதன், வல்லபன் என இரு சிற்பங்கள் இருந்தன. சிரித்தபடியே தன் தலையை வெட்டுவது போல காணப்படும் இந்த இரு சிற்பங்களையும், தற்போது தனி அறையில் எடுத்து வைத்து விட்டனர் என்று கூறினார்.

திருப்பாச்சேத்தியில் வாமன அவதார நிலதான கல், சூலக்கல், பல்வேறு கால கல்வெட்டுகள், புடைப்பு சிற்பங்கள் உள்ளிட்டவை திருப்புவனம் வட்டாரத்தில் தொடர்ச்சியாகக் கிடைத்து வரும் நிலையில், அவற்றைப் பாதுகாக்க தொல்லியல் துறையினர் முன்வர வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Arikanda sculpture
ShareTweetSendShare
Previous Post

மக்கள் நீதிமன்றம்: பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 186.73 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை பேட்டிங் !

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies