அரிகண்ட சிற்பம்: பாதுகாக்க வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரிகண்ட சிற்பம்: பாதுகாக்க வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 02:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள புதூர் பகுதியில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிகண்டம் சிற்பம் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதூரில் இருந்து மடப்புரம் செல்லும் வழியில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிகண்ட சிற்பம், பல்வேறு கால கல்வெட்டு உட்பட பல சிற்பங்கள் காணப்படுகிறது. அரிகண்டம் என்பது, மன்னன் போரில் வெற்றி பெற வேண்டியோ, நோயிலிருந்து மீளவோ காளி தேவியிடம் வேண்டிக்கொண்டு போரில் வெற்றி பெற்ற பிறகு அல்லது உடல் நலம் சரியான பிறகு தன் தலையைத் தானே அரிந்து உயிர் விடுதல் ஆகும். நவகண்டம் என்பது ஒன்பது இடங்களில் வெட்டி, உடம்பை ஒன்பது கண்டங்களாக்கி உயிரைத் துறப்பது ஆகும்.

இதுகுறித்து ஆய்வாளர் காளைராஜன் கூறியதாவது, அரிகண்ட சிற்பம் காளிக்கு வேண்டுதல் நிறைவேற தன்னைத்தானே பலி கொடுத்தலை குறிப்பதாகும். அரி என்றால் நறுக்கி என்பது அர்த்தம். அரிகண்ட சிற்பம், நவகண்ட சிற்பம் என இரு வகை சிற்பங்கள் உள்ளன.

மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளதால், காளிக்கு பலி கொடுத்தல் குறித்த சிற்பமாக அரிகண்ட சிற்பம் இருக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக, திருப்புவனகாசி என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மடப்புரம் கோவிலில் அம்மனுக்கு இருபுறமும் சித்திரசரிதன், வல்லபன் என இரு சிற்பங்கள் இருந்தன. சிரித்தபடியே தன் தலையை வெட்டுவது போல காணப்படும் இந்த இரு சிற்பங்களையும், தற்போது தனி அறையில் எடுத்து வைத்து விட்டனர் என்று கூறினார்.

திருப்பாச்சேத்தியில் வாமன அவதார நிலதான கல், சூலக்கல், பல்வேறு கால கல்வெட்டுகள், புடைப்பு சிற்பங்கள் உள்ளிட்டவை திருப்புவனம் வட்டாரத்தில் தொடர்ச்சியாகக் கிடைத்து வரும் நிலையில், அவற்றைப் பாதுகாக்க தொல்லியல் துறையினர் முன்வர வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Arikanda sculpture
Share
Tweet
SendShare
Previous Post

மக்கள் நீதிமன்றம்: பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 186.73 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை பேட்டிங் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies