மக்கள் நீதிமன்றம்: பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 186.73 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
Apr 29, 2026, 11:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் நீதிமன்றம்: பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 186.73 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

Murugesan M by Murugesan M
Oct 16, 2023, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் நடந்த, ‘லோக் அதாலத்’ எனும் மக்கள் நீதிமன்றத்தில், 8,092 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டோர்களுக்கு186.73 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுத்தலைவருமான எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு செயல்தலைவருமான எஸ்.வைத்தியநாதன், உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மூத்த நீதிபதியுமான டி.கிருஷ்ணகுமார் ஆகியோரது அறிவுறுத்தல்படி, குடும்பப் பிரச்னைகள், காசோலை வழக்குகள், விபத்து தொடர்பான நிலுவை வழக்குகளுக்கான சிறப்பு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் டி.பரத சக்ரவர்த்தி, பி.தனபால், சி.குமரப்பன், ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆகியோர் தலைமையில் நான்கு அமர்வுகளும், மதுரை கிளையில் நீதிபதிகள் விக்டோரியா கௌரி, பி.பி.பாலாஜி தலைமையில் இரண்டு அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா அளவில், 194 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், விபத்து இழப்பீடு தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 8,092 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டோர்களுக்கு ரூபாய் 186.73 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மட்டும், 96 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, 12.69 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தகவலை மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசிர் அகமது, சென்னை உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலர் சுதா ஆகியோர் தெரிவித்தனர்.

Tags: lok adalatPeople's Court: Victims Rs. 186.73 crore as compensation
ShareTweetSendShare
Previous Post

மக்களே உஷார்: இந்த 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Next Post

அரிகண்ட சிற்பம்: பாதுகாக்க வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies