அதிவிரைவு ரேபிட் எக்ஸ் இரயில் - 20ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
Sep 12, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிவிரைவு ரேபிட் எக்ஸ் இரயில் – 20ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 06:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி-மீரட் இடையிலான இந்தியாவின் முதல் அதிவிரைவு ரேபிட் எக்ஸ் ரயில் தடத்தின் ஒருபகுதி இணைப்பை பிரதமர் மோடி வரும் 20ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

மொத்தம் 82 கிலோமீட்டர் தூரத்திற்கு ரேபிட் எக்ஸ் ரயிலை அறிமுகம் செய்ய பணிகள் நடந்து வருகின்றன. டெல்லி-மீரட் இடையிலான இந்தியாவின் முதல் அதிவிரைவு ரேபிட் எக்ஸ் ரயில் 17 கிலோமீட்டர் தூரம் வரை 5 ரயில் நிலையங்களை இப்பாதை கடந்து செல்கிறது. ஷாஹிபாத், காசியாபாத், குல்தார், துஹாய், மற்றும் துஹாய் டெப்போ ஆகிய 5 ரயில் நிலையங்களில் இந்த ரயில் பயணிக்க உள்ளது.

முழு அளவிலான பாதை வரும் 2025ம் தேதி தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 12ம் தேதி உத்தரப்பிரதேச முதலமைச்சர் இந்த ரயில் தடத்தின் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

ஒரு மெட்ரோ ரயில் 100 கிலோமீட்டர் தூரத்தை 3 மணிநேரத்தில் அடையும் என்றால் இந்த ரேபிட் விரைவு ரயில் அதனை ஒருமணி நேரத்திற்குள் அடைந்து விடும்.

ரேபிட் எக்ஸ் ரயில்களில் மொத்தம் 6 பெட்டிகள் இருக்கும். அதில் ஒன்று பிரீமியம் வகை பெட்டிகள். அதாவது சொகுசு வசதிகள் கொண்டதாக காணப்படும். இந்த பெட்டியில் ஏறுவதற்கு பிளாட்பாரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். மற்றொரு பெட்டி பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 பெட்டிகளும் ஏசி வசதி செய்யப்பட்டிருக்கும்.

இவற்றில் ஸ்டாண்டர்டு மற்றும் பிரீமியம் வகை பெட்டிகள் இருக்கும். இருபுறமும் தலா இரண்டு இருக்கைகள் இடம்பெற்றிருக்கும். ஒரு பெட்டியில் 72 பயணிகள் வரை அமர முடியும்.

ஒவ்வொரு இருக்கையிலும் மொபைல் சார்ஜிங் வசதி, புத்தகங்கள் வைக்கும் வசதி இருக்கும். நின்று கொண்டே பயணிப்பவர்களுக்கு வசதியாக கைப்பிடிகள் அமைந்துள்ளன. இதுதவிர லக்கேஜ் வைப்பதற்கான வசதி, சிசிடிவி கேமரா, அவசர கால உதவிக்கான பட்டன், பயணிகளுக்கு உரிய தகவல்களை தெரிவிக்கும் வகையிலான மானிட்டரிங் சிஸ்டம், வைஃபை வசதி, தானியங்கி உணவுப் பொருட்கள் வழங்கும் ஏடிஎம் உள்ளிட்டவை இருக்கின்றன. கதவுகளை பயணிகளே திறக்கும் வண்ணம் பட்டன் வசதி செய்யப்பட்டுள்ளது.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

பூரியில் “திவ்ய சமகம்” ஆன்மிக நிகழ்ச்சி!

Next Post

காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திடீர் கைது – பரபரப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies