காஸா மருத்துவமனை தாக்குதலில் யாரும் இறக்கவில்லை: ஆதாரங்களுடன் இஸ்ரேல் உறுதி!
Sep 14, 2026, 08:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஸா மருத்துவமனை தாக்குதலில் யாரும் இறக்கவில்லை: ஆதாரங்களுடன் இஸ்ரேல் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 19, 2023, 06:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஸா மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தீவிரவாதிகள் கூறியிருந்த நிலையில், அங்கு யாருமே உயிரிழக்கவில்லை, ஹமாஸ் கட்டிவிட்ட கதை அது என்று இஸ்ரேல் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்திருக்கிறது.

இஸ்ரேலுக்கும், காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே 13-வது நாளாக இன்றும் போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேல் நடத்திய பதிலடித் தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 3,500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்த சூழலில், நேற்று காலை காஸாவில் உள்ள அல் அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனை மீது ராக்கெட் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் இராணுவம்தான் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் குற்றம்சாட்டினர். மேலும், இத்தாக்குதலில் 471 பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

ஆனால், இத்தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றும், பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாதிகள், தங்கள் நாட்டின் மீது ஏவிய ராக்கெட், தவறுதலாக காஸா மருத்துவமனையைத் தாக்கியதாகவும் வீடியோ ஆதாரங்களுடன் இஸ்ரேல் பாதுகாப்புப் படை விளக்கம் அளித்திருந்தது. அதே நாளில் இஸ்ரேல் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இத்தாக்குதலில் வேறொரு அமைப்பு ஈடுபட்டிருப்பதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், காஸா மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் யாருமே உயிரிழக்கவில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ் கூறுகையில், “மருத்துவமனையின் கார் பார்க்கிங்கில்தான் ராக்கெட் வெடித்திருக்கிறது.

இதில், சில கார்கள் எரிந்திருக்கின்றன. ஆனால், யாரும் உயிரிழந்ததாகத் தெரியவில்லை. இது தொடர்பான வீடியோ பகுப்பாய்வு செய்து பார்க்கும்போது இது தெளிவாகிறது. இத்தாக்குதலில் உண்மையில் 500 பேர் கொல்லப்பட்டிருந்தால், வெடித்த சில நிமிடங்களில் எடுக்கப்பட்ட வீடியோவில் ஒருவரது உடல் கூட காட்டப்படவில்லை.

உயிரிழந்தவர்களின் உடல்கள் எங்கே? அத்தனை உடல்களும் சில நிமிடங்களிலேயே அகற்றப்பட்டு விட்டதா? இது சாத்தியமானதா? மேலும், தாக்குதலுக்கு உள்ளான பகுதி முழுவதும் கருப்பு நிறத்தில் இருக்கிறது. ஆகவே, அங்கு நிச்சயமாக தீப்பிடித்திருக்க வேண்டும். ஏனெனில், அங்கு தீயின் எச்சங்கள் இருக்கின்றன.

ஆனால், இஸ்ரேல் வெடிகுண்டு ஒரு இலக்கைத் தாக்கினால் அங்கு ஒரு பெரிய பள்ளம் ஏற்படுமே தவிர, தீப்பிடிக்க வாய்ப்பு இல்லை. அதேசமயம், ராக்கெட்டுகளை ஏவும்போது அது தீப்பிடிக்கும். ஆகவே, பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாதிகள் ஏவிய ராக்கெட்தான் மருத்துவமனையைத் தாக்கி இருக்கிறது.

இது தவிர, மருத்துவமனையின் கார் பார்க்கிங்கில்தான் அந்த ராக்கெட் விழுந்திருக்கிறது. இதனால், அங்கிருந்த கார்கள் தீப்பிடித்திருக்கின்றன. ஆனால், இச்சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. உயிரிழந்ததாகக் கூறிவது ஹமாஸ் கட்டிவிட்ட கதை. இஸ்ரேல் மீது பழிபோட வேண்டும் என்பதற்காக இப்படியொரு கதையை கட்டி விட்டிருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: HospitalIsraelKazaIDF
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் 3 பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலத்திலிருந்து விடுவிப்பு! -நிலக்கரி அமைச்சகம்.

Next Post

அரசு மின் சந்தை கொள்முதலில் ரூ.28,665 கோடி என்ற இலக்கை எட்டியுள்ளது! – நிலக்கரி அமைச்சகம்.

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies