தாஜ்மகால் வரலாறு: ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
Feb 11, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாஜ்மகால் வரலாறு: ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 3, 2023, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்திருக்கிறது தாஜ்மகால். சுமார் 21 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த தாஜ்மகால் முழுக்க முழுக்க பளிங்குக் கற்களால் பதிக்கப்பட்டிருக்கிறது. 7 உலக அதிசயங்களில் தாஜ்மகாலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த தாஜ்மகால் முகலாய அரசர் ஷாஜஹான், தனது மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டியதாக வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கிறது. இதைத்தான் மாணவர்கள் அனைவரும் இன்று வரை படித்து வருகிறார்கள்.

ஆனால், தாஜ்மகால் குறித்த சர்ச்சை நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. அதாவது, தாஜ்மகால் முகலாய அரசர் ஷாஜஹானால் கட்டப்படவில்லை. அது இந்து மன்னர் ராஜா மான் சிங்கின் அரண்மனை. முகலாயர்களின் ஆட்சியின்போது, ராஜா மான் சிங்கிடம் அபகரிக்கப்பட்டது. அதன் பிறகு, இந்த அரண்மனையை ஷாஜஹான் புதுப்பித்தார். ஆகவே, தாஜ்மகாலில் ஆய்வு நடத்தினால் இந்த உண்மை வெளிவரும் என்று இந்துக்கள் தரப்பில் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான், தாஜ்மகாலின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும். அதன் உண்மையான வரலாற்றை கண்டறிவதற்கான வழிகாட்டுதலை ஏற்படுத்த வேண்டும் என்று ஹிந்து சேனா அமைப்பு தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பாக, அந்த அமைப்பின் தலைவர் சுர்ஜித் சிங் யாதவ் தாக்கல் செய்த மனுவில், “தாஜ்மஹால் முதலில் ராஜா மான் சிங்கின் அரண்மனை. பின்னர் ஷாஜஹானால் புதுப்பிக்கப்பட்டது.

ஆகவே, தாஜ்மஹால் தொடர்பான தவறான வரலாறை புத்தகங்களில் இருந்து அகற்ற தொல்லியல்துறை, மத்திய அரசு, இந்திய தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். தாஜ்மகாலின் வயது, ராஜா மான் சிங்கின் அரண்மனை கட்டப்பட்ட ஆண்டு ஆகியவை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி துஷார் ரான் கெடலோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தாஜ்மகால் தொடர்பாக ஆய்வு நடத்தும்படி மத்திய தொல்லியல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இது தொடர்பாக இந்து சேனா அமைப்பு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருந்தது. இதனையும் மத்திய தொல்லியல் துறையிடம் கோரிக்கை மனுவாக அளிக்கும்படி பரிந்துரை செய்திருந்தது. இதனை மேற்கோள் காட்டி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: courttajmahalhindu sena
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் மண்டல – மகரவிளக்கு பூஜை!

Next Post

பசுமைப் பொறியியல் என்பது காலத்தின் தேவை! – குடியரசுத் தலைவர்

Related News

வந்தே மாதரம் பாடல் – மத்திய அரசு முக்கிய உத்தரவு

ராகுல் காந்தி உருப்படியான எந்தக் கருத்துகளையும் முன்வைக்கவில்லை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி! – போரட்டக்களமாக மாறிய மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி!

pinal Muscular Atrophy நோயால் பாதிக்கப்பட்ட 1.5 வயது குழந்தை – ஊசிக்கு ரூ.1.5 கோடி ஆகும் என்பதால் பெற்றோர் தவிப்பு

அமைச்சர் காந்தியை புறக்கணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – திமுகவுக்குள் சலசலப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டில் மட்டும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளாதது ஏன்..? – பிரவீன் சக்கரவர்த்தி

10 ஆண்டுகளாக நடைபெறும் கழிவுநீர் கால்வாய் பணி – போஸ்டர் ஓட்டி விமர்சித்த பாஜகவினர்!

அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது – காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்!

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா மோசமாக நடத்தியது – பாக் அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் – போக்சோவில் அதிரடி கைது

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழு அமைப்பு!

ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!

பறவைக் காய்ச்சல் எதிரொலி – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை புறக்கணித்த தூய்மைப்பணியாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies