தாஜ்மகால் வரலாறு: ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
Apr 21, 2026, 05:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாஜ்மகால் வரலாறு: ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 3, 2023, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்திருக்கிறது தாஜ்மகால். சுமார் 21 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த தாஜ்மகால் முழுக்க முழுக்க பளிங்குக் கற்களால் பதிக்கப்பட்டிருக்கிறது. 7 உலக அதிசயங்களில் தாஜ்மகாலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த தாஜ்மகால் முகலாய அரசர் ஷாஜஹான், தனது மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டியதாக வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கிறது. இதைத்தான் மாணவர்கள் அனைவரும் இன்று வரை படித்து வருகிறார்கள்.

ஆனால், தாஜ்மகால் குறித்த சர்ச்சை நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. அதாவது, தாஜ்மகால் முகலாய அரசர் ஷாஜஹானால் கட்டப்படவில்லை. அது இந்து மன்னர் ராஜா மான் சிங்கின் அரண்மனை. முகலாயர்களின் ஆட்சியின்போது, ராஜா மான் சிங்கிடம் அபகரிக்கப்பட்டது. அதன் பிறகு, இந்த அரண்மனையை ஷாஜஹான் புதுப்பித்தார். ஆகவே, தாஜ்மகாலில் ஆய்வு நடத்தினால் இந்த உண்மை வெளிவரும் என்று இந்துக்கள் தரப்பில் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான், தாஜ்மகாலின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும். அதன் உண்மையான வரலாற்றை கண்டறிவதற்கான வழிகாட்டுதலை ஏற்படுத்த வேண்டும் என்று ஹிந்து சேனா அமைப்பு தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பாக, அந்த அமைப்பின் தலைவர் சுர்ஜித் சிங் யாதவ் தாக்கல் செய்த மனுவில், “தாஜ்மஹால் முதலில் ராஜா மான் சிங்கின் அரண்மனை. பின்னர் ஷாஜஹானால் புதுப்பிக்கப்பட்டது.

ஆகவே, தாஜ்மஹால் தொடர்பான தவறான வரலாறை புத்தகங்களில் இருந்து அகற்ற தொல்லியல்துறை, மத்திய அரசு, இந்திய தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். தாஜ்மகாலின் வயது, ராஜா மான் சிங்கின் அரண்மனை கட்டப்பட்ட ஆண்டு ஆகியவை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி துஷார் ரான் கெடலோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தாஜ்மகால் தொடர்பாக ஆய்வு நடத்தும்படி மத்திய தொல்லியல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இது தொடர்பாக இந்து சேனா அமைப்பு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருந்தது. இதனையும் மத்திய தொல்லியல் துறையிடம் கோரிக்கை மனுவாக அளிக்கும்படி பரிந்துரை செய்திருந்தது. இதனை மேற்கோள் காட்டி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: courttajmahalhindu sena
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் மண்டல – மகரவிளக்கு பூஜை!

Next Post

பசுமைப் பொறியியல் என்பது காலத்தின் தேவை! – குடியரசுத் தலைவர்

Related News

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

என்டிஏ 110, திமுக கூட்டணி 90 – தமிழ் ஜனம் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கும் திமுக – அன்புமணி விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சால்வை அணிவிக்க சென்ற மனோ தங்கராஜ் – நோ சொன்ன ராகுல் காந்தி!

சட்டமன்ற தேர்தலில் தோல்வி என உளவுத்துறை தகவல் – தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் திமுகவினர்!

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் – திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தல்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies