அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக் கொண்டுள்ளதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து கடந்த 2025ஆம் ஆண்டு அண்ணாமலை நீக்கப்பட்டார். தமிழக அரசியலில் புதிய பாதையில் பயணிக்க முடிவு செய்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகுவதாக கட்சி தலைமைக்கு தெரிவித்தார்.
கடந்த 1ஆம் தேதி டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ், தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை வழங்கினார்.
இந்நிலையில், அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
















