உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி !
Jul 29, 2026, 09:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி லக்னோவில் ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானதில் நடைபெற்றது.

நேற்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்லி பாரேசி மற்றும் மேக்ஸ் ஓ’டவுட் களமிறங்கினர்.

இதில் வெஸ்லி பாரேசி முதல் ஓவரிலேயே 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக நெதர்லாந்து அணியின் வீரர் கொலின் அக்கர்மன் களமிறங்கினார்.

மேக்ஸ் ஓ’டவுட் மற்றும் கொலின் அக்கர்மன் சிறப்பாக தங்களது திறமைகளை காண்பித்து வந்தனர். இதில் மேக்ஸ் ஓ’டவுட் 9 பௌண்டரீஸ் அடித்து 11 வது ஓவரில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் களமிறங்கினார். கொலின் மற்றும் சைப்ரண்ட் கூட்டணியும் சிறப்பாக விளையாடி பௌண்டரிசாக அடித்து வந்தது. அப்போது 19 வது ஓவரில் கொலின் 4 பௌண்டரிஸுடன் 29 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

அடுத்ததாக சிறப்பாக விளையாடி வந்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் அடுத்த பந்திலேயே ரன் அவுட் ஆனார். சைப்ரண்ட் 6 பௌண்டரிஸுடன் 86 பந்துகளில் 58 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட் தான் இறங்கிய முதல் பந்திலேயே ரன் அவுட் ஆகி சென்றார்.

பின்பு களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நெதர்லாந்து வீரர்களை பொறுத்தவரை 4 பேர் ரன் அவுட் ஆனது அந்த அணிக்கு வேதனையை அளித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது நம்பி 3 விக்கெட்களும், நூர் அஹ்மத் 2 விக்கெட்களும், முஜீப் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

இதனால் நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர்.

இதில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 5 வது ஓவரில் 11 பந்துகளில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்பு 10 வது ஓவரில் இப்ராஹிம் 34 பந்துகளில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய ரஹ்மத் ஷா 8 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 54 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 56 ரன்களும், அஸ்மத்துல்லா உமர்சாய் 31 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால் 31 வது ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.

நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக் மற்றும் ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்கள் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நபி அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

Tags: sports
ShareTweetSendShare
Previous Post

உலககோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் முக்கிய வீரர் விலகல் !

Next Post

நீலகிரி மலை இரயில் சேவை இரத்து

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies