உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி !
Jul 3, 2025, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி !

Web Desk by Web Desk
Nov 4, 2023, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி லக்னோவில் ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானதில் நடைபெற்றது.

நேற்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன்படி நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்லி பாரேசி மற்றும் மேக்ஸ் ஓ’டவுட் களமிறங்கினர்.

இதில் வெஸ்லி பாரேசி முதல் ஓவரிலேயே 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக நெதர்லாந்து அணியின் வீரர் கொலின் அக்கர்மன் களமிறங்கினார்.

மேக்ஸ் ஓ’டவுட் மற்றும் கொலின் அக்கர்மன் சிறப்பாக தங்களது திறமைகளை காண்பித்து வந்தனர். இதில் மேக்ஸ் ஓ’டவுட் 9 பௌண்டரீஸ் அடித்து 11 வது ஓவரில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் களமிறங்கினார். கொலின் மற்றும் சைப்ரண்ட் கூட்டணியும் சிறப்பாக விளையாடி பௌண்டரிசாக அடித்து வந்தது. அப்போது 19 வது ஓவரில் கொலின் 4 பௌண்டரிஸுடன் 29 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

அடுத்ததாக சிறப்பாக விளையாடி வந்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் அடுத்த பந்திலேயே ரன் அவுட் ஆனார். சைப்ரண்ட் 6 பௌண்டரிஸுடன் 86 பந்துகளில் 58 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட் தான் இறங்கிய முதல் பந்திலேயே ரன் அவுட் ஆகி சென்றார்.

பின்பு களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நெதர்லாந்து வீரர்களை பொறுத்தவரை 4 பேர் ரன் அவுட் ஆனது அந்த அணிக்கு வேதனையை அளித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது நம்பி 3 விக்கெட்களும், நூர் அஹ்மத் 2 விக்கெட்களும், முஜீப் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

இதனால் நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர்.

இதில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 5 வது ஓவரில் 11 பந்துகளில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்பு 10 வது ஓவரில் இப்ராஹிம் 34 பந்துகளில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய ரஹ்மத் ஷா 8 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 54 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 56 ரன்களும், அஸ்மத்துல்லா உமர்சாய் 31 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனால் 31 வது ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.

நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக் மற்றும் ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்கள் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நபி அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

Tags: sports
ShareTweetSendShare
Previous Post

உலககோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் முக்கிய வீரர் விலகல் !

Next Post

நீலகிரி மலை இரயில் சேவை இரத்து

Related News

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

சேலையூர் இளைஞர் கொலை வழக்கு – 6 பேர் கைது!

ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்!

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் கூடுதல் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் – எஸ்பி மிரட்டடியதாக குற்றச்சாட்டு!

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies