வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய யாத்திரை!
May 11, 2026, 11:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய யாத்திரை!

திட்டங்களின் பயனாளிகளை நேரடியாகச் சந்திக்கும் வகையில் இந்த யாத்திரை அமையும்! - எல் முருகன்

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 07:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய யாத்திரை தொடர்பான நிகழ்ச்சியை கோத்தகிரியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கிவைத்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திரடி மோடி, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய யாத்திரையை இன்று தொடங்கி வைத்தார்.  இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், நடைபெற்ற இந்த யாத்திரை (‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’) தொடர்பான நிகழ்ச்சியை மத்திய தகவல் ஒலிபரப்பு,  மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், கோத்தகிரியைச் சேர்ந்த, 17 விவசாயிகளுக்கு, மத்திய அரசின் விவசாய பயிர் கடனுக்கான காசோலைகளை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் வழங்கினார். அதைத் தொடர்ந்து, பழங்குடியின மக்களின் நலன் மற்றும் அதிகாரமளித்தலுக்கான மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் விழிப்புணர்வுக் கையேடுகளை அவர் வெளியிட்டார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஷேக் மீரா, நபார்டு வங்கி அதிகாரிகள், வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பழங்குடியின மக்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் போது ஜார்க்கண்டில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, விவசாயிகளுக்கு சிறுதானிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, மாணவர்களின் நடன நிகழ்ச்சியையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக, பிரதமர் இன்று இந்த யாத்திரையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத், ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம், விஸ்வகர்மா திட்டம் போன்ற மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்தப்படுவதுடன், இத்திட்டங்களின் பயனாளிகளை நேரடியாகச் சந்திக்கும் வகையில் இந்த யாத்திரை அமையும் என்று கூறினார்.

தமிழகத்தை பொறுத்தவரை, இந்த யாத்திரையில், 20 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும் இன்று தொடங்கியுள்ள இந்த யாத்திரை, முதல் கட்டமாக, பழங்குடியினர்  அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடைபெறுகிறது. இது ஜனவரி 25-ம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

 

இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தின் ஏற்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  நபார்டு வங்கியின் பொது மேலாளர், இந்தியன் வங்கியின்  துணை பொது மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினர்.

இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் தேன்மலை அத்திப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மண் வள அட்டை மற்றும் வேளாண் கடன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கான அனுமதி  ஆணை வழங்கப்பட்டது.

Tags: L MuruganCentral Minister
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவு!

Next Post

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி – உண்மை நிலவரம் என்ன?

Related News

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

எஸ்.பி வேலுமணி தலைமையில் தனி அணி ?; தீவிர ஆலோசனை

திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஜோசப் விஜய்

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழகத்தின் கடன் உள்ளது – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக பதவியேற்றார் விஜய் – ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies