அமலாக்கத்துறை சம்மன் - அதிர்ச்சியில் 10 மாவட்ட ஆட்சியர்கள்!
Jun 15, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை சம்மன் – அதிர்ச்சியில் 10 மாவட்ட ஆட்சியர்கள்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2023, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆறுகளில், மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு குறித்து, 10 மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி நதி பாயும், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு குவாரிகள் செயல்பட்டு வருகிறது.

இதில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மாதவப்பெருமாள் கோவில், தாளக்குடி, நொச்சியம், கொண்டையம்பேட்டை பகுதியில் மணல் குவாரிகளில் அரசு அனுமதித்த டோக்கனை விட அதிக லாரிகளில் மணல் அள்ளுவதாகப் புகார் எழுந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு கார்களில் வந்து, கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில், 3 அடிக்குப் பதில் 10 அடிக்கு மேல் மணல் அள்ளியுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதேபோல, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினருடன் கரூர் மாவட்டத்தில், நன்னியூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதனிடையே, உதவி பொறியாளர் சாதிக் பாஷா, இளநிலை பொறியாளர் ஆறுமுகம் மற்றும் உதவியாளர் சத்யராஜ் ஆகிய 3 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

குறிப்பாக, எப்போது, மேல் விசாரணைக்கு அழைத்தாலும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும் என நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், காவிரி மற்றும் வைகை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆறுகளில், மணல் குவாரிகளில் நடைபெற்ற மோசடி குறித்து, 10 மாவட்ட ஆட்சியர்களிடம் நேரில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: ED RAIDEnforcement department
ShareTweetSendShare
Previous Post

ஏழுமலையானுக்கு 7 டன் பூக்கள் மூலம் புஷ்ப யாகம்!

Next Post

திமுகவுக்கு வருமானம் வரும் வழிகளில் மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்! -அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies