பள்ளிப் பாடத்திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம்!
Apr 29, 2026, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிப் பாடத்திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளி பாடத் திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களைச் சோ்க்கவும், நாட்டின் பெயரை ‘பாரதம்’ என்று மாற்றவும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் உயா்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குப் பள்ளிக் கல்வி தொடர்பாக உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையில், பள்ளி பாடத் திட்டங்களை என்சிஇஆா்டி புதுப்பித்து வருகிறது. இதற்கென, அந்தந்த பாட நிபுணா்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமூக அறிவியல் பாடத்துக்கான 7 உறுப்பினா்களைக் கொண்ட நிபுணா் குழு, பல்வேறு பரிந்துரைகளுடன் கூடிய தனது அறிக்கையை என்சிஇஆா்டி-யிடம் சமர்ப்பித்துள்ளது.

இது தொடர்பாக நிபுணா் குழுவின் தலைவர் ஐசக் கூறியதாவது: நாட்டின் இளைஞர்களிடையே சுயமரியாதை, தேசப்பற்று, தேசத்தின் பெருமைகள் குறித்த உணா்வை ஏற்படுத்துவது முக்கியமானது ஆகும்.

இதற்கு, சமூக அறிவியல் பாடத்திட்டத்தில், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சோ்க்கப்பட்டு, கற்பிக்கப்பட வேண்டும். பாடப்புத்தகங்களில் இந்திய ஆயுர்வேத முறைகளைச் சேர்க்க வேண்டும்.

மேலும், பள்ளி பாடப் புத்தகங்களில் பண்டைய வரலாறு என்பதற்குப் பதிலாக ‘பாரம்பரிய வரலாறு’ என மாற்றவும், நாட்டின் பெயா் இந்தியா என்பதை ‘பாரதம்’ என பெயா் மாற்றம் செய்யவும், நாட்டை ஆண்ட அரசா்களின் வெற்றிகளை இடம்பெறச் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். நமது ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை உள்ளிட்ட சமூக மதிப்பீடுகளுக்கு அரசியல் சாசனத்தின் முன்னுரை முக்கியத்துவம் அளிக்கிறது.

எனவே, அதனை மாணவா்கள் பாா்த்து கற்றுக் கொள்ளும் வகையில் வகுப்பறை சுவா்களில் எழுதப்பட வேண்டும் என்றும் உயா்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது என்றாா்.

இந்தப் பரிந்துரைகளை என்சிஇஆா்டி-யின் 19 உறுப்பினா்களைக் கொண்ட குழு பரிசீலனை செய்து, பாடத் திட்டத்தை இறுதி செய்வதற்கான அறிவிக்கையை வரும் 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடும் என்று கூறினார்.

Tags: ramayanammahabharatham
ShareTweetSendShare
Previous Post

கால்பந்து தகுதிச்சுற்று : கத்தார் வெற்றி!

Next Post

ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் – தப்பிக்க சூப்பர் டிப்ஸ்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies