கேரளாவில் தொடரும் கனமழை – வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், மக்கள் அவதி!
Sep 12, 2026, 10:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் தொடரும் கனமழை – வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், மக்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Nov 23, 2023, 12:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. மேலும், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நவம்பர் 24-ஆம் தேதி வரை கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. குறிப்பாக, தெக்கமூடு பண்ட் காலனி, முறிஞ்சாபாலம் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. மேலும், மின் தடை ஏற்பட்டதால், மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அப்பகுதியிலுள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், நேற்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்தது. கோட்ட தட்டி மற்றும் சென்னீர்கரை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று மாவட்டத்திற்கு ரெட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், சபரிமலை கோவில் மற்றும் வனப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலக்கல்லில் இருந்து பம்பை செல்லும் வழியில், நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், பக்தர்கள் அந்த வழியாகச் செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்பாகப் பயணிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கனமழையால் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மலையோர பகுதிகளுக்கு இரவு பயணத்தை தவிர்க்க அந்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். இது சபரிமலை பக்தர்கள் மற்றும் யாத்திரை பயணங்களுக்குப் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இன்று திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags: KeralaKerala flood
Share
Tweet
SendShare
Previous Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா!

Next Post

தேசிய கட்சியில் இணையும் திமுக கவுன்சிலர்கள்? – நெல்லையில் பரபரப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies