வங்கக்கடலில் மிக்ஜாம் புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கக்கடலில் மிக்ஜாம் புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 11:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுப்பெற உள்ளது. அதற்கு, ‘மிக்ஜாம்’ என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், மூன்று புயல்கள் உருவாகியுள்ளன. முதலில் உருவான தேஜ் புயல் ஓமனிலும், இதற்கு அடுத்து உருவான ஹாமூன் மற்றும் மிதிலி புயல்கள், வங்க தேசத்திலும் கரை கடந்தன.

இந்த நிலையில், அந்தமானின் தெற்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வங்கக் கடலின் தென் கிழக்கில், 29-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

பின், 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வங்கக் கடலின் தென்கிழக்கில் புயலாக வலுப்பெறும். இதனால், அந்தமானின் தெற்கு, தென் கிழக்கு பகுதிகளில், வடக்கு கடல் பகுதிகள் மற்றும் வங்கக் கடலின் தென்கிழக்கு, தென் மேற்கு பகுதிகளில், வரும் 1-ஆம் தேதி வரை மணிக்கு, 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு, 1-ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி கடலில் நகரும் வேகம், திசை ஆகியவற்றை, ‘ரேடார்’ மூலமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர், 1-ஆம் தேதிக்கு பின், புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு, மியான்மர் வழங்கியுள்ள, ‘மிக்ஜாம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

புயல் வடமேற்கில் நகரும்போது, நாகப்பட்டினம் முதல் ஒடிசாவின் புவனேஸ்வர் வரையிலான கடற்பகுதிகளில், கன மழையுடன் சூறாவளி காற்று வீசும் வாய்ப்புள்ளது. அதேபோல, நாகை முதல் புவனேஸ்வர் வரையிலான கடற்பகுதியில், ஒரு இடத்தில் கரை கடக்கும் வாய்ப்புள்ளது.

Tags: Chennai Meteorological Centreheavy rainfall
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 65.48 அடியாக அதிகரிப்பு!

Next Post

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: மக்கள் பீதி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies