வீனஸை ஆய்வு செய்ய சுக்ரயான் தயார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
Sep 13, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீனஸை ஆய்வு செய்ய சுக்ரயான் தயார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 28, 2023, 02:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிலவுக்கு சந்திரயான்-3, சூரியனுக்கு ‛ஆதித்யா எல்-1′ திட்டங்களைத் தொடர்ந்து, வீனஸ் கிரகத்தை ஆய்வு செய்ய சுக்ராயன் திட்டம் தயாராக இருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருக்கிறார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சமீபகாலமாக சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது.

இந்த விண்கலம் திட்டமிட்டபடி, 40 நாட்கள் பயணத்துக்குப் பிறகு ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.

பின்னர், விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்ஞான் ரோவர் நிலவில் தடம் பதித்து தனது ஆய்வுகளைத் தொடங்கியது.

இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்கிற பெருமையும், நிலவில் தடம் பதித்த 4-வது நாடு என்கிற பெருமையும் இந்தியாவுக்குக் கிடைத்தது.

இதைத் தொடரந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்கிற விண்கலத்தை செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தி இருக்கிறது.

இந்த விண்கலம் தற்போது சூரியனின் எல்-1 புள்ளியை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது. திட்டமிட்டபடி ஜனவரி 7-ம் தேதி எல்-1 புள்ளியில் நுழையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் செயல்பாடுகளை பெங்களூருவிலுள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவாறு விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அடுத்ததாக வீனஸ் கிரகத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ தயாராகி வருகிறது. சுக்ரயான் மிஷன் என்று அழைக்கப்படும் இத்திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், “சந்திரயான், ஆதித்யா எல்-1 ஆகியவற்றைத் தொடர்ந்து ‘வீனஸ்’ குறித்து ஆய்வு செய்ய சுக்ராயன் திட்டம் தயாராக இருக்கிறது.

இத்திட்டம் முழுமையாக வளர்ச்சி அடைந்து விட்டது. எதிர்காலத்தில் பூமியின் வளிமண்டலம் நச்சுத்தன்மையுடையதாக மாறும். இதனால் இத்திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.

Tags: SHUKRAYAANISROMissionChief Somnath
Share
Tweet
SendShare
Previous Post

ஹெச்.வி. ஹெண்டே பிறந்த நாள்! – அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் வாழ்த்து!

Next Post

நெருக்கடியான நேரத்தில் உதவிகளை செய்யும் சீக்கியர்கள் : ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies