கடற்படை தினம் 2023: போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள்  மரியாதை!
Apr 29, 2026, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்படை தினம் 2023: போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள்  மரியாதை!

Murugesan M by Murugesan M
Dec 2, 2023, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடற்படை தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற விழாவில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான், இராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தலைமைத் தளபதி விஆர் சௌத்ரி மற்றும் கடற்படைத் தளபதி ஆர் ஹரிகுமார் ஆகியோர் கலந்துகொண்டு, தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

1971-ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போரின் போது, டிசம்பர் 4 -ஆம் தேதி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்குள், துணிச்சலாக நுழைந்த இந்தியக் கடற்படையினர், பாகிஸ்தானின் போர்கப்பல்களைத் தாக்கி அழித்தனர்.  ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ என்று அழைக்கப்பட்ட இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானின் முக்கிய போர்கப்பல்கள் அழிக்கப்பட்டன.

இந்திய கடற்படையின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 -ஆம் தேதி ‘இந்திய கடற்படை தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 1971-ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களும் நினைவுகூறப்படுகின்றனர்.

இந்த நிலையில், நாட்டின் மேற்குக் கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற சிந்துதுர் கோட்டையில், கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலமான கடற்படை செயல் விளக்கம் 2023, டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கடற்படை தலைமைத் தளபதி ஆர். ஹரிகுமார் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வை, மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், இராணுவப் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டுகளிக்க உள்ளனர். இந்த நிகழ்வு நமது வளமான கடல்சார் வரலாற்றைக் கொண்டாடுவதையும், பெருமைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகராஜாவால் 1660-ல் கட்டப்பட்ட சிந்துதுர் கோட்டை இந்தியாவின் வளமான கடல்சார் வரலாற்றைப் பெருமைப்படுத்துகிறது. இந்த நிகழ்வில் இந்தியக் கடற்படையின் அதிநவீன கப்பல்கள், விமானங்கள் நேரடி ஒளிபரப்பு மூலம் பொதுமக்களுக்கும் காட்சிப்படுத்தப்படும்.

இந்த நிகழ்வில் 20 போர்க்கப்பல்கள், மிக் 29 கே, எல்.சி.ஏ உள்ளிட்ட 40 விமானங்கள் பங்கேற்க உள்ளன. மேலும், இந்தியக் கடற்படையின்  கடல்சார் கமாண்டோக்களின் கடற்கரை கண்காணிப்பு மற்றும் தாக்குதல் செயல் விளக்கம் ஆகியவை நடைபெற உள்ளது.

Tags: NavyIndianNavyDayNavyDay2023IndianNavyDay 2023
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூரில் புதிய தொடக்கம் ஆரம்பமாகி உள்ளது !

Next Post

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் புதிய சாதனை!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies