ஜாதி ரீதியான அரசியலால் காங்கிரஸ் நிராகரிப்பு: அனுராக் தாக்கூர்!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாதி ரீதியான அரசியலால் காங்கிரஸ் நிராகரிப்பு: அனுராக் தாக்கூர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 05:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்திருக்கும் நிலையில், ஜாதி ரீதியான அரசியலால் மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டனர் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிதேசம், ராஜஸ்தான் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இவற்றில் மிசோராம் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

அதேசமயம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுத்திருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தோல்வி குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “பிரதமர் மோடி மீது நாடு நம்பிக்கை வைத்திருக்கிறது.

ஒரே ஒரு உத்தரவாதம் மட்டுமே செயல்படுகிறது என்பதை அனைத்து மாநிலங்களும் காட்டி இருக்கின்றன. அதுதான் மோடியின் உத்தரவாதம். அதேசமயம், காங்கிரஸின் உத்தரவாதங்கள் தோல்வியடைந்தன. மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்தை நிராகரித்து விட்டனர்.

ஜாதி ரீதியான அரசியல் செய்தால் ஒரே ஒரு பதில்தான் என்று மக்கள் காங்கிரஸுக்குக் காட்டி இருக்கிறார்கள். நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் பிரதமர் மோடியின் இரட்டை இன்ஜின் ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள். அதோடு, ராஜஸ்தானில் நடந்த ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களால், பெண்கள் காங்கிரஸுக்கு எதிராக வாக்களித்தார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, எதிர்க்கட்சிகள் எவ்வளவு அதிகமாக பிரதமர் மோடியின் இமேஜை இழிவுபடுத்த முயன்றார்களோ, அவ்வளவு அதிகமாக பிரதமர் மோடி வளர்ந்தார். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் மட்டுமே இந்தியாவில் உள்ள ஜாதிகள்.

மத்தியப் பிரதேச தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடியின் தலைமையை பாராட்டுகிறேன். இது கட்சித் தொண்டர்களின் வெற்றி. பிரதமர் மோடியின் புகழும், மாநில மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களும் பா.ஜ.க.வை வெற்றிபெறச் செய்திருக்கிறது” என்றார்.

Tags: PM ModiAnurag ThakurPraisedBJP Victory
Share
Tweet
SendShare
Previous Post

எந்த ரூபத்தில் ஆபத்து வரும் – தெரியுமா?

Next Post

மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies