விரும்பியதை செய்வதாக நீதிபதி கூற முடியாது: தலைமை நீதிபதி!
Sep 14, 2026, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விரும்பியதை செய்வதாக நீதிபதி கூற முடியாது: தலைமை நீதிபதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 9, 2023, 11:17 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீதிபதிக்கென வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளை நீதிபதிகள் பின்பற்றியாக வேண்டும். நான் விரும்பியதைத்தான் செய்வேன் என்று ஒரு நீதிபதி கூற முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருக்கிறார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமா்வு முன்பு ஒரு மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை வழக்கறிஞா் மேத்யூஸ் ஜெ.நெடும்பரா தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “உச்ச நீதிமன்றம் மற்றும் உயா் நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகளை கொலீஜியம் பரிந்துரை செய்து வருகிறது. இந்த கொலீஜியம் நடைமுறையில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், மூத்த வழக்கறிஞா் என்கிற பதவியை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “ஒரு வழக்கறிஞராக உங்கள் மனம் விரும்புவதைக் கேட்கும் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது. அதேசமயம், ஒரு தலைமை நீதிபதியாக சட்டம் மற்றும் அரசியல் சாசனத்தின் சேவகன் நான். ஆகவே, நீதிபதிக்கென வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். நான் விரும்பியதைத்தான் செய்வேன் என்று ஒரு நீதிபதியாகக் கூற முடியாது” என்றார்.

வழக்கறிஞர் மேத்யூஸ் ஜெ.நெடும்பரா உட்பட 8 பேர், மூத்த வழக்கறிஞா் என்கிற பதவியை ரத்து செய்யக் கோரி ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கெளல் தலைமையிலான அமா்வு, கடந்த அக்டோபர் மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், “இந்த மனு தவறான முன்னுதாரணமாக இருக்கிறது. மூத்த வழக்கறிஞா் பதவி என்பது வழக்கறிஞரின் அனுபவம் மற்றும் தகுதிக்கு நீதிமன்றம் கொடுக்கும் அங்கீகாரமாகும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

Tags: Chief JusticeT.Y.Chandrachud
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கரின் படத்தை அகற்றும் எண்ணம் இல்லை! – சட்டப்பேரவையின் சபாநாயகர் யு.டி காதர் தகவல்!

Next Post

உலகின் பிரபலமான தலைவர்கள்: முதலிடத்தில் பிரதமர் மோடி!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies