இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!
Jul 29, 2026, 02:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 10:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்தில் பாதுகாப்புக்கான இளவரசர் ஹாரியின் போராட்டம் தொடர்கிறது. போதுமான பாதுகாப்பு இல்லாமல் வீட்டிற்குச் செல்லும்போது தானும் தனது குடும்பத்தினரும் ஒருபோதும் பாதுகாப்பாக உணர முடியாது என்று ஹாரி கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டின் மன்னர் 3-ம் சார்லஸின் இளைய மகன் ஹாரி. இவர், 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் தனது மனைவி மேகனுடன் பிரிட்டிஷ் அரச குடும்பத்தை விட்டு வெளியேறி, அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்தார். இதனால், இங்கிலாந்தின் வரி செலுத்துவோர் நிதியுதவி பெற்ற பாதுகாப்பு நீக்கப்பட்டது.

இதையடுத்து, ஹாரி லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த செவ்வாய்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது ஹாரியின் வழக்கறிஞர் ஷஹீத் பாத்திமா, “ஹாரியின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதை ஏற்கவில்லை” என்றார்.

மேலும், பாத்திமா நீதிமன்றத்தில் ஹாரியின் எழுத்துப்பூர்வ அறிக்கையைப் படித்தார். அதில், “நானும் எனது மனைவியும் 2020-ல் இங்கிலாந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இங்கிலாந்து எனது வீடு. எனது குழந்தைகளின் பாரம்பரியத்தின் மையமாகும்.

ஆகவே, எனது குழந்தைகள் அமெரிக்காவில் வசிக்கும் இடத்தைப் போலவே, இங்கிலாந்திலும் உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனது குழந்தைகள் இங்கிலாந்து மண்ணில் இருக்கும்போது, அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாவிட்டால் அது நடக்காது.

என்னால் என் மனைவியை அப்படி ஆபத்தில் ஆழ்த்த முடியாது. வாழ்க்கையில் எனது அனுபவங்களைக் கருத்தில் கொண்டு தேவையில்லாமல் என்னைத் தீங்கிழைக்கத் தயங்குகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

எனினும், இங்கிலாந்தில் இருந்து ஹாரி வெளியேறினாலும் அவரது அரச குடும்ப அந்தஸ்து மற்றும் அவரது தாயார் இளவரசி டயானாவின் மரணம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் நியாயமற்றது என்று அவரது வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

Tags: LondonPrince harrySecurityDanger
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

Next Post

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies